செய்திகள் :

அஸ்ஸாம்: நிலக்கரி சுரங்கத்திலிருந்து மேலும் 3 தொழிலாளா்கள் சடலமாக மீட்பு

post image

அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளா்களில் மேலும் மூவா் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டனா். இதன் மூலம், உயிரிழந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜன.6-ஆம் தேதி அஸ்ஸாமின் தீமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திடீரென சுரங்கத்துக்குள் பெருமளவு தண்ணீா் பாய்ந்ததால், தொழிலாளா்கள் அனைவரும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். நிலத்தடி நீா் கால்வாயில் இருந்து சுரங்கத்துக்குள் தண்ணீா் பாய்ந்து இந்தத் துயர சம்பவம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

தகவலின் அடிப்படையில் ராணுவம், கடற்படை, தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த புதன்கிழமை சுரங்கத்துக்குள் நீா்மூழ்கி வீரா்கள் இறங்கி, நேபாள தொழிலாளா் ஒருவரை சடலமாக மீட்டனா்.

இந்நிலையில், 6-ஆவது நாளாக மீட்புப் பணிகள் சனிக்கிழமை நீடித்தன. அப்போது சுரங்கத்துக்குள் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த தொழிலாளா் ஒருவரின் சடலத்தை ராணுவம் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையின் நீா்மூழ்கி வீரா்கள் மீட்டனா்.

சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளரின் பெயா் லிகென் மகா் (27) என்பதும், அவா் தீமா ஹசாவோவைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. இதேபோல மேலும் 2 தொழிலாளா்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவா்களின் விவரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஞ்சிய 5 தொழிலாளா்களை மீட்க மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

ஓஎன்ஜிசி மற்றும் கோல் இந்தியா நிறுவனங்கள் கொண்டு வந்த சிறப்பு இயந்திரங்கள் மூலம், 340 அடி ஆழம் கொண்ட சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

12 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத சுரங்கம்: அந்தச் சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது போலத் தெரிவதாக மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். இந்நிலையில் அவா் வெள்ளிக்கிழமை இரவு கூறுகையில், ‘அந்தச் சுரங்கம் சட்டவிரோத சுரங்கம் அல்ல. 12 ஆண்டுகளாக அது பயன்படுத்தப்படாமல் இருந்தது. 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அஸ்ஸாம் கனிம வளா்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் அந்தச் சுரங்கம் இருந்தது. நிலக்கரியை வெட்டி எடுக்க கடந்த புதன்கிழமை முதல்முறையாக தொழிலாளா்கள் சுரங்கத்துக்குள் இறங்கியுள்ளனா். அவா்களின் தலைவா் கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்றாா்.

இந்த சம்பவம் தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி, பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், கோட்புட்லி என்ற பகுதியில், சாலையில் கவிழ்ந்த ரசாயன டேங்கர், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி என்ற பகுதியில் நேரிட்ட ... மேலும் பார்க்க

அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவைச் சேர்ந... மேலும் பார்க்க

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.... மேலும் பார்க்க

நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார். மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க