செய்திகள் :

மதுரை மத்தி: "அறியாமைக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

post image

மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி வேட்பாளராகக் களமிறங்கி இருக்கும் நிலையில், அதே தொகுதியில் தி.மு.க சார்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார்.

நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, ``ஒரு அரசு மீண்டும் தேர்தலில் நிற்கும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தது என்பதைச் சொல்வதுதான் மிக முக்கியம்.

கல்வி, நல்வாழ்வு, தொழில்மயமாக்கல் மற்றும் ஏற்றுமதி என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், முந்தைய 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியின் சராசரி வளர்ச்சியை விட (CAGR), இந்த 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியின் வளர்ச்சி விகிதம் மிகச் சிறப்பாகவும், வரலாற்றுச் சாதனையாகவும் உள்ளது.

சுந்தர் சி
சுந்தர் சி

இதுதவிர இந்த முறை கூட்டணி முன்பை விட பலமடைந்துள்ளது. கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்ற முக்கியப் புள்ளிகள் இப்போது தி.மு.க கூட்டணியில் இருக்கின்றனர்.

கடந்த முறை எனக்கு எதிராக நின்று 10% வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம் நண்பர்கள், எஸ்.டி.பி.ஐ மாவட்டச் செயலாளர், மற்றும் தே.மு.தி.க நிர்வாகிகள் எனப் பலரும் இன்று எங்களோடு கைகோர்த்துள்ளனர்.

குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் போன்றோரும் இன்று எங்களுடன் இணைந்துள்ளதால், இது ஒரு வெற்றிப் பேரியக்கமாக மாறியுள்ளது.

கடந்த முறை நான் அறிவித்த திட்டங்களின் தொடர்ச்சியாக, இந்த முறை மதுரையின் வளர்ச்சிக்கெனப் பிரத்யேகமான மற்றும் குறிப்பான சில திட்டங்களை மக்கள் முன் வைக்கப்போகிறேன்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

எதிர்க்கட்சிகனர், வெளியூரிலிருந்து வந்தவர்களெல்லாம் எதையாவது பேசிவிட்டுச் செல்லட்டும். அவர்களின் அறியாமைக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உள்ளூர் மக்களுக்கும், களத்தில் இருக்கும் செய்தியாளர்களுக்கும் உண்மை என்ன என்பது நன்றாகவே தெரியும். மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே எனது பணி" என்றார்.

'ஒவ்வொரு கப்பலுக்கு 2 மில்லியன் டாலர்கள்' - ஹார்முஸ் முதல் யுரேனியம் வரை; ஈரானின் 10 நிபந்தனைகள்

அமெரிக்க நேரப்படி, இன்று இரவு 8 மணிக்கு ஈரான் மீதான கடும் தாக்குதலுக்கு நேரத்தைக் குறித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவர் வைத்திருக்கும் ஒரே நிபந்தனை 'ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும்' என... மேலும் பார்க்க

அருணாச்சலப் பிரதேசம்: முதல்வர் பேமா காண்டு மீது சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா காண்டுவின் உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு, விதிமுறைகளை மீறி அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: ``மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." - ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

கொ ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் - ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்... மேலும் பார்க்க

`மனைவிக்கு இரண்டு பாஸ்போர்ட்? அமெரிக்கா, துபாயில் சொத்து' - ஹிமந்தா பிஸ்வாவைச் சுற்றும் சர்ச்சை!

அஸ்ஸாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 9-ம் தேதி தேர்தலும் மே-4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சட்டமன்ற... மேலும் பார்க்க

``காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை.!" - பிரவீன் சக்ரவர்த்தி

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் கட்சி தாமதமாகத் தான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. காரணம் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள்ளேயே பல குளறுபடிகள் அரங்கேறி இருக்கின்றன. வேட்பாளர்கள் ... மேலும் பார்க்க

`புதுச்சேரி அரசின் ஆயி மண்டபம் சின்னத்தை மாற்றுவோம்!' - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், `அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு ... மேலும் பார்க்க