செய்திகள் :

ஆப்கன் வீரருக்கு இந்தியக் குடியுரிமை? - BCCI சொன்ன விஷயம்; ரஷீத் கான் அதிர்ச்சித் தகவல்!

post image

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷீத் கான் தனது சுயசரிதைப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான். இவர் 'ரஷீத் கான்: தெருக்களிலிருந்து நட்சத்திர அந்தஸ்து வரை' (Rashid Khan: From Streets to Stardom) என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனக்கு குடியுரிமை வழங்க முன்வந்ததாகவும், ஆனால் அவற்றை தான் நிராகரித்துவிட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

ரஷீத் கான்
ரஷீத் கான்

இது தொடர்பாக அவர் தன் புத்தகத்தில், ``கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) மூத்த அதிகாரி ஒருவர் என்னை அணுகி, `ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அங்குள்ள பிரச்னைகள் உங்களுக்குத் தெரியும். அதனால் நீங்கள் இந்தியாவிலேயே இருந்துவிடுங்கள். உங்களுக்குத் தேவையான இந்திய ஆவணங்கள் அனைத்தையும் நாங்கள் வழங்குகிறோம், நீங்கள் இந்தியாவிற்காக கிரிக்கெட் விளையாடுங்கள்' எனக் கேட்டுக்கொண்டார்.

அந்த அதிகாரியின் பேச்சைக் கேட்டு திகைத்துப்போனேன். எப்படிப் பதிலளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. அதற்குப் பிறகு புன்னகையுடன், `மிக்க நன்றி. நான் எனது நாடான ஆப்கானிஸ்தானுக்காக மட்டுமே விளையாடுவேன். என் நாட்டிற்காக விளையாடவில்லை என்றால், வேறு எந்த நாட்டிற்காகவும் நான் விளையாட மாட்டேன்' என்று உறுதியாகக் கூறிவிட்டேன். இந்தியா மட்டுமன்றி ஆஸ்திரேலியா நாடும் இத்தகைய வாய்ப்பை வழங்கியது. ஆனால் அதையும் நான் ஏற்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஷீத் கான்
ரஷீத் கான்

தற்போதைய ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரஷீத் கான் அபாரமாகச் செயல்பட்டு வருகிறார். இந்த சீசனின் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், மீண்டும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். இதுவரை விளையாடிய போட்டிகளில் 20 ஓவர்கள் பந்துவீசி, 154 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குஜராத் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற இவரது பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

PBKS vs LSG: "வரும் போட்டிகளில் சிறந்த அணியாக வலிமையுடன் செயல்படுவோம்!"-கேப்டன் ரிஷப் பண்ட்

ஐபில் தொடரில் நேற்று ( ஏப்ரல் 19) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் vs லக்னோ அணிகள் மோதின. இதில் லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் அசைக்க முடியாத... மேலும் பார்க்க

PBKS vs LSG: `தேன் கூட்டில் கை வைத்த ரிஷப் பன்ட்' - அடித்து ஆடிய பஞ்சாப்; அடி வாங்கிய லக்னோ!

ஐ.பி.எல்-இல் இப்போதைய நிலையில் அசைக்கவே முடியாத அணியாக, புள்ளி பட்டியலில் தோல்வியே காணாமல் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியும், எப்படியாவது மேலே வந்து விட மாட்டோமா? என்ற எண்ணத்தில் 8வது இடத்தில் ... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ்: "கேப்டன் பதவியிலிருந்து ஹர்திக் விலக வேண்டும்" - காரணம் சொல்லும் மனோஜ் திவாரி

ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஹர்திக் தனது பதவியை ராஜினாமா செய்துவிட... மேலும் பார்க்க

MI vs PBKS: 'என்னங்க சிவாஜி இப்படி ஆயிடுச்சு...' - பரிதாப மும்பை இந்தியன்ஸ்!

ஐ.பி.எல். தொடரில் தொடர்ந்து நான்காவது தோல்வியைப் பதிவு செய்து, ஒன்பதாவது இடத்திலேயே நீடிக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.De kockநேற்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேய... மேலும் பார்க்க

2026 FIDE: மகுடம் சூடிய வைஷாலி: வெற்றியைத் தொடர்ந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு எழுதியுள்ளார்.சைப்ரஸில் நடைபெற்ற 2026 பிடே (FIDE) மகளிர் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், உலக செஸ் மகுடத்தி... மேலும் பார்க்க

ஆண்களின் கால்பந்து சாம்ராஜ்யத்தில் ஒரு பெண்: வரலாறு படைத்த மேரி-லூயிஸ் எட்டா!

கால்பந்து உலகில் `டாப் 5 லீக்ஸ்' (இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்) என்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான களமாகக் கருதப்படுகிறது. இதுவரை இந்தப் போட்டிகளின் பயிற்சியாளர் இடத்தில் ஒரு ப... மேலும் பார்க்க