செய்திகள் :

ஆம்பூர்: பச்சிளம் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை; தாய், தந்தையால் அரங்கேறிய கொடூரம்; 4 பேர் கைது

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாங்காதோப்பு பாஷா நகர்ப் பகுதியில் வசிக்கும் டீ மாஸ்டர் தொழிலாளி ரஹமத்துல்லா, வயது 38. இவரின் மனைவி ஹவாமா. இவர்களுக்குத் திருமணமாகி 17 ஆண்டுகளாகிறது. ஏற்கெனவே இரு ஆண் பிள்ளைகள் மற்றும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி ஹவாமாவுக்கு 5-வது பிரசவம் நடந்தது. இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும், பெண் குழந்தை என்பதால் அவர்களுக்கு வளர்க்க விருப்பமில்லையாம். குடும்ப வறுமையைக் காரணமாகச் சொல்லி, தங்களின் உறவினர்கள் மூலமாக கடந்த 23-ம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த ஷம்ரின்தாஜ் என்பவரிடம் ரூ.1 லட்சத்துக்கு ரஹமத்துல்லா, ஹவாமா தம்பதியினர் தங்களின் பெண் குழந்தையை விற்பனைச் செய்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட தாய்

இதுபற்றி, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு ரகசியமாக புகார்ச் சென்றது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீஸார் தனிப்படை அமைத்து குழந்தையை மீட்க முயன்றனர். பெங்களூரு சென்று குழந்தையை மீட்ட போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோர் ரஹமத்துல்லா, ஹவாமா மற்றும் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய பெங்களூருவைச் சேர்ந்த ஷம்ரின் தாஜ், அவரின் கணவர் அக்பர் பாஷா ஆகிய 4 பேரையும் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட பெண் குழந்தை, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

வாணியம்பாடி: கிணற்றில் மிதந்த 2 சிறுவர்களின் பிணம்; கிராமத்தையே அலறவிட்ட சம்பவம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தில், சுகுணா பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு அமைந்திருக்கிறது. இந்த கிணற்றிலிருந்து நிலத்தின் உரிமையாளர் தண்ணீர்... மேலும் பார்க்க

அரக்கோணம்: கணவரின் மரணம், மீளமுடியாத துயரம்; இரு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த அம்மிக்கல் செதுக்கும் தொழிலாளி கோட்டையா, வயது 30. இவரின் மனைவி வள்ளி (23). இவர்களுக்கு 7 வயதில் பரத், 3 வயதில் சந்தோஷ் என்று இரு ... மேலும் பார்க்க

இன்ஸ்டா நட்பு; புகைப்படத்தை ஆபாசமாகத் திரித்து மிரட்டும் இளைஞன்; போலீஸில் மாணவி புகார்!

வேலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், காட்பாடியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். மனுவில் அவர், ``நான் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறேன். எனக்கு இன்ஸ்டாகிராம் ... மேலும் பார்க்க

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தவெக நிர்வாகி – தட்டி தூக்கிய பொள்ளாச்சி போலீஸ்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்களை இயக்கபட்டு வருகிறது. இதில் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர் தமி... மேலும் பார்க்க

'அப்பா, அம்மாவை தனியாக விட்டுவிடாதே' - ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் வாலிபர் விபரீத முடிவு

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் பகுதியை சேர்ந்த ரோஹித் தன்கர்(17) என்ற வாலிபர் 11வது வகுப்பு படித்து வந்தார். ரோஹித் ரக்‌ஷாபந்தன் அன்று தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்... மேலும் பார்க்க

ஆவின்: டப்பா டப்பாவாக நெய் திருட்டு; வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிர்ச்சி கொடுத்த பெண் அதிகாரி!

சேலம் மாவட்டம்‌ இரும்பாலை சாலை, தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் இயங்கி வருகிறது. பாக்கெட் பால் , பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் உற்பத்தி செய... மேலும் பார்க்க