செய்திகள் :

'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன?

post image

ஆட்சியமைக்க ஆதரவளித்த மற்றும் தங்களுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் தோழமைக் கட்சிகளின் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த சமயத்தில் இப்படியொரு கூட்டத்தை நடத்துவதற்கு பின்னால் முதல்வர் தரப்பு நிறைய கணக்குகளை தீட்டி வைத்திருப்பதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்தான் தவெக கூட்டணி அரசு நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த கூட்டணி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

தங்களுக்கு ஆதரவு தெரிவித்த இந்த கட்சித் தலைவர்களுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை முதல்வர் விஜய் நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு கோவளத்தில் நடத்தவிருக்கிறார். இந்த கூட்டத்துக்கான அழைப்புகளும் முறைப்படி அத்தனை கட்சிகளுக்கும் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர்,

திருமா

'தவெக அரசு அமைய நிறைய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் காங்கிரஸை தவிர யாரும் எங்களை முழு மனதுடன் ஆதரிக்கவில்லை. விசிக, கம்யூனிஸ்ட்டுகள், ஐ.யூ.எம்.எல் என அத்தனை பேரும் அவ்வபோது திமுகவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

விசிக மீது ஆ.ராசாவை வைத்து திமுக கடும் விமர்சனங்களை முன்வைக்கிறது. அதற்கு அமைச்சர் வன்னி அரசுவும் காட்டமாக பதில் கூறி வருகிறார். அதேமாதிரி, கம்யூனிஸ்ட்டுகள் குறித்தும் முரசொலியில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை திமுக வெளியிட்டு வருகிறது. இதற்கு கம்யூனிஸ்ட்டுகளும் தக்க பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்னொரு பக்கம் மதிமுகவும் ஐ.யூ.எம்.எல் உம் பொதுக்குழுவை கூட்டி திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துவிட்டன. திமுக மீது ஏனைய கட்சிகளுக்கு அதிருப்தி அதிகமாகி முரண்பாடுகள் முற்றியிருக்கும் இந்த சூழலை முதல்வர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.

இந்த சமயத்தில் தோழமை கட்சிகளையெல்லாம் ஒன்றிணைத்து கூட்டம் போடுவதன் மூலம், 'நாமெல்லாம் ஒன்றாக நிற்கலாம். திமுக கூட்டணி போல அல்லாமல் உங்களுக்கான உரிய மரியாதை எப்போதும் இங்கே கிடைக்கும்' என உறுதிப்படுத்தவிருக்கிறார்.

பெ.சண்முகம்

அதேமாதிரி, அரசு நிர்வாகரீதியாகவும் உங்கள் தரப்பு கருத்துகளை எப்போது வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம் என்றும் கூறவிருக்கிறார். இந்த தோழமைக் கட்சிகளை இடைத்தேர்தலுக்குள் ஒரு `முழு கூட்டணியாக' மாற்ற வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அதன்மூலம் தேர்தல் களத்தில் திமுகவை இன்னும் தனிமைப்படுத்தி பலவீனமாக்க வேண்டுமென நினைக்கிறார். அதற்கான காய் நகர்த்தல்தான் இந்த கூட்டம்' என்கின்றனர்!

'கரூருக்கு செல்ல முடிவெடுத்த முதல்வர் விஜய்?' - முழு விவரம் என்ன?

முதல்வர் விஜய் கரூருக்கு சென்று கூட்ட நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.Vijayகடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நாம... மேலும் பார்க்க

அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகும், ஈரான் - அமெரிக்கா இடையே மோதல்! இதற்கான '5' காரணங்கள் என்ன?

கடந்த ஜூன் 17-ம் தேதி, அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டலில் கையெழுத்தானது. அடுத்ததாக, சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை வேறு நடந்தது... பல்வேறு முடிவுகளும்... மேலும் பார்க்க

`தொண்டை சரியில்ல' - ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என பல வாக்குறுதிகள் வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

மாண்புமிகு இயற்கை வளங்கள் அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு அவர்களுக்கு பாராட்டு விழா!

காரைக்குடி வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (Chamber of Commerce and Industries, Karaikudi) சார்பில், இயற்கை வளங்கள் மற்றும் கனிம வள துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் டி.கே. பிரபு அவர்களுக்கு பாராட்டு... மேலும் பார்க்க

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர் - உடனே ஏற்றுக்கொண்ட சபாநாயகர்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இதனைத்தொடர்ந்து அதிமுக-விலிருந்து சில எம்.எ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் முக்கிய மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌ... மேலும் பார்க்க