செய்திகள் :

``இது நாடகத்துக்கான இடமல்ல... பேசுவதற்கான இடம்" - எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி

post image

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, "சில எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியின் கசப்பால் அவையைச் செயல்பட விடாமல் தடுப்பது இளம் எம்.பி.க்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியாத சூழலை உருவாக்கும். தோல்வியின் கசப்பும் வெற்றியின் ஆணவமும் அவையிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியடைந்த யுக்திகளை மாற்ற வேண்டும். அதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்கவும் தயாராக இருக்கிறேன். பீகார் தோல்வி நடந்து பல நாள்கள் ஆகிறது. அவர்கள் இப்போது அதிலிருந்து மீண்டிருக்க வேண்டும்.

சமநிலையுடனும், பொறுப்புணர்வுடனும், மக்கள் பிரதிநிதிகளாக நமது பொறுப்பைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இளம் எம்.பி.க்களும், முதல் முறையாக எம்.பி.க்களாக இருப்பவர்களும் தங்கள் திறமையைக் காட்டவும், தங்கள் தொகுதியின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு பகுதியாக மாற தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் முடியவில்லை.

இதைச் செய்வதிலிருந்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். அனைத்துக் கட்சிகளிலிருந்தும் புதிய எம்.பி.க்களுக்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் அனுபவங்களிலிருந்து சபை பயனடைய வேண்டும். புதிய தலைமுறை தேசத்திற்குப் பயனளிக்க முடியும். எனவே, இந்த விஷயங்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாடகத்திற்குப் பல இடங்கள் உள்ளன.

இங்கே, நாடகம் அல்ல பேச்சு அவசியம். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துங்கள். முழு நாட்டில் எங்கு வேண்டுமானாலும் உங்களின் கோஷத்தை எழுப்பலாம். நாடாளுமன்றம் நீதிக்கானது, உங்கள் கோஷங்களுக்கானதல்ல.

மோடி
மோடி

சில மாநிலங்களில், மக்களிடம் செல்ல முடியாத அளவுக்கு மக்களின் எதிர்ப்பு அவர்கள் மீது அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கோபத்தை எல்லாம் அவையில் வெளிப்படுத்துகிறார்கள். மேலும் தங்கள் மாநில அரசியலுக்குப் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தும் ஒரு புதிய நடைமுறையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாடு இந்த விளையாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் உத்தியை மாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்போம்: இது நாடகமல்லவே" - பிரதமர் மோடிக்கு பிரியாங்கா காந்தி பதில்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (... மேலும் பார்க்க

டிரம்ப்பின் நெருக்கடியில் இந்திய ரஷ்ய உறவுகள் - புடின் பயணம் எதை சாதிக்கும் ?

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன்மணிவ... மேலும் பார்க்க

'தள்ளிப்போகும் தேதி' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே

பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம். இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு ... மேலும் பார்க்க

``கஜானா சாவி என்னிடம்தான், எங்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி'' - தேர்தல் பிரசாரத்தில் அஜித்பவார்

மகாராஷ்டிராவில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்ட நிலையில் ஆளும் கட்சி தலைவர்கள்தான் ஒவ்வொரு இடமும் சென்று தீவிர பிரசாரம் ... மேலும் பார்க்க

TVK: ``விஜய் வெறுப்பு அரசியலையே உயர்த்திப்பிடிக்கிறார்" - வேலூரில் திருமாவளவன்

வேலூர் வி.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``ஆளுநர் மாளிகைக்கு இதுவரை ராஜ்பவன் என்று இருந்த பெயரை இப்போது ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ... மேலும் பார்க்க