செய்திகள் :

``இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்போம்: இது நாடகமல்லவே" - பிரதமர் மோடிக்கு பிரியாங்கா காந்தி பதில்!

post image

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), பல பூத் நிலை அதிகாரிகளின் (BLO) தற்கொலைகள், நவம்பர் 10 டெல்லி பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட தேசிய பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதங்களை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளன.

இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விஷயங்களை விவாதிக்க வேண்டும். வெறும் கோஷங்களுக்கான இடமல்ல நாடாளுமன்றம்.

பிரதமர் மோடி

தோல்வியின் கசப்பையும், வெற்றியின் ஆணவத்தையும் வெளியே வைத்துவிட்டு நாட்டு மக்களின் நலனுக்காக உரையாற்ற வேண்டும். நாடாளுமன்றம் வெறும் நாடகம் நடத்துவதற்கான இடமல்ல. பேசுவதற்கான இடம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான பிரியாங்கா காந்தி வத்ரா, "தற்போது நடந்துவரும் தேர்தல்களின் நிலை, எஸ்.ஐ.ஆர், டெல்லி மாசுபாடு ஆகியவை மிகப்பெரிய பிரச்னைகள். அவற்றைப் பற்றி விவாதிப்போம். நாடாளுமன்றம் எதற்காக? பேசுவதற்காகத்தானே...

எனவே, இவற்றைப் பற்றி பேசுவது நாடகமாகாது. பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதும், கேள்வி எழுப்புவதும் நாடகம் அல்ல. பொதுமக்களுக்கு முக்கியமான பிரச்னைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை நாடகங்கள் அனுமதிப்பதில்லை" எனத் தெரிவித்தார்.

``இது நாடகத்துக்கான இடமல்ல... பேசுவதற்கான இடம்" - எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, "சில எதி... மேலும் பார்க்க

டிரம்ப்பின் நெருக்கடியில் இந்திய ரஷ்ய உறவுகள் - புடின் பயணம் எதை சாதிக்கும் ?

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன்மணிவ... மேலும் பார்க்க

'தள்ளிப்போகும் தேதி' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே

பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம். இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு ... மேலும் பார்க்க

``கஜானா சாவி என்னிடம்தான், எங்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி'' - தேர்தல் பிரசாரத்தில் அஜித்பவார்

மகாராஷ்டிராவில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்ட நிலையில் ஆளும் கட்சி தலைவர்கள்தான் ஒவ்வொரு இடமும் சென்று தீவிர பிரசாரம் ... மேலும் பார்க்க

TVK: ``விஜய் வெறுப்பு அரசியலையே உயர்த்திப்பிடிக்கிறார்" - வேலூரில் திருமாவளவன்

வேலூர் வி.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``ஆளுநர் மாளிகைக்கு இதுவரை ராஜ்பவன் என்று இருந்த பெயரை இப்போது ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ... மேலும் பார்க்க