செய்திகள் :

இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன்? - பின்னணி!

post image

சர்வதேச நாணய நிதியம் (IMF), நேற்று பாகிஸ்தானுக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், உடனடியாக 1 பில்லியன் டாலரை கடனாக விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன் என்ற கேள்வுகள் எழுப்பபடுகிறது.

பாகிஸ்தானுக்கு விடுவிக்கப்பட்டுள்ள இந்தக் கடன் இப்போது கேட்கப்பட்டது அல்ல. கடந்த மார்ச் மாதம் நடந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த ஒப்பந்தத்தில் இந்தக் கடன் கொடுப்பதாக முடிவானது. இந்தக் கடன் தண்ணீர் வரி, மின்சார வரி, கார்பன் பயன்பாடு குறைப்பு போன்ற காரணங்களுக்காக கேட்கப்பட்டது.

இந்தக் கடனை பாகிஸ்தானுக்கு தருவதற்கு இந்தியா நேற்று நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டாலர்கள்
டாலர்கள்

கடனை ரத்து செய்ய இந்தியா கூறும் காரணங்கள் என்ன?

கடந்த 35 ஆண்டுகளில், 28 ஆண்டுகள் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. ஆனால், அது எதையுமே பாகிஸ்தான் சரியாக பயன்படுத்தவில்லை. அவர்கள் செய்வதாக கூறியதைக் கூட செய்யவில்லை.

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார விவகாரங்களில் தொடர்ச்சியாக அந்த நாட்டின் ராணுவத்தின் தலையீடு இருந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு இப்படி வழங்கப்படும் நிதி எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு உதவ பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினர் நாடுகள் அல்லது நாடுகளின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்த 25 இயக்குநர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

ஒரு நாட்டிற்கு கடன் வழங்குவது சம்பந்தமாக முடிவு எடுக்க அவர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்படும். நாடுகள் மற்றும் அதன் பிரதிநிதித்துவம் பொறுத்து சதவிகிதங்களின் அடிப்படையில் 25 பேருக்கும் வாக்குகள் கொடுக்கப்படும்.

இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கலாம் அல்லது கலந்துகொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அவ்வளவு தான். கடன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து எல்லாம் ஓட்டு போட முடியாது. அதனால், பாகிஸ்தானுக்கு கடன் அளிக்கும் வாக்கெடுப்பில் தனது எதிர்ப்பை தெரிவித்து இந்தியா கலந்து கொள்ளவில்லை.

’மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வேண்டும்’- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `பாண்லே நஷ்டத்தில் இயங்குகிறது… பாதி ஊழியர்களை காணவில்லை’ – அப்செட்டான முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி குருமாம்பேட்டில் இயங்கி வரும் அரசின் பாண்லே நிறுவனத்தில், 20,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி நேற்று துவக்கி வைத்தார். அப்போது பேசிய ... மேலும் பார்க்க

நிதி ஆயோக்: முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பும்… திமுக-வின் குற்றச்சாட்டுகளும்!

நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் ஆட்சிக் குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியிர... மேலும் பார்க்க

Trump: 'இதை செய்யவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்துக்கு 25% வரி விதிக்கப்படும்' - மிரட்டும் ட்ரம்ப்

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கி... மேலும் பார்க்க

'விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு' - பிரேமலதாவின் கணக்கு என்ன?

தே.மு.தி.க மீது மாறி, மாறி கூட்டணி பேரம் பேசும் கட்சி என்கிற விமர்சனம் இருக்கிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் உறுதியாக இருந்தார், பிரேமலதா. தே.மு.தி.க தலைவர... மேலும் பார்க்க

4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதியர்களில் ஒருவராகத் திகழும் பி.கே.சேகர்பாபுவை, அறநிலையத்துறை அமைச்சரா... மேலும் பார்க்க