செய்திகள் :

இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன்? - பின்னணி!

post image

சர்வதேச நாணய நிதியம் (IMF), நேற்று பாகிஸ்தானுக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், உடனடியாக 1 பில்லியன் டாலரை கடனாக விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன் என்ற கேள்வுகள் எழுப்பபடுகிறது.

பாகிஸ்தானுக்கு விடுவிக்கப்பட்டுள்ள இந்தக் கடன் இப்போது கேட்கப்பட்டது அல்ல. கடந்த மார்ச் மாதம் நடந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த ஒப்பந்தத்தில் இந்தக் கடன் கொடுப்பதாக முடிவானது. இந்தக் கடன் தண்ணீர் வரி, மின்சார வரி, கார்பன் பயன்பாடு குறைப்பு போன்ற காரணங்களுக்காக கேட்கப்பட்டது.

இந்தக் கடனை பாகிஸ்தானுக்கு தருவதற்கு இந்தியா நேற்று நடந்த சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டாலர்கள்
டாலர்கள்

கடனை ரத்து செய்ய இந்தியா கூறும் காரணங்கள் என்ன?

கடந்த 35 ஆண்டுகளில், 28 ஆண்டுகள் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. ஆனால், அது எதையுமே பாகிஸ்தான் சரியாக பயன்படுத்தவில்லை. அவர்கள் செய்வதாக கூறியதைக் கூட செய்யவில்லை.

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார விவகாரங்களில் தொடர்ச்சியாக அந்த நாட்டின் ராணுவத்தின் தலையீடு இருந்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு இப்படி வழங்கப்படும் நிதி எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு உதவ பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினர் நாடுகள் அல்லது நாடுகளின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்த 25 இயக்குநர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

ஒரு நாட்டிற்கு கடன் வழங்குவது சம்பந்தமாக முடிவு எடுக்க அவர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்படும். நாடுகள் மற்றும் அதன் பிரதிநிதித்துவம் பொறுத்து சதவிகிதங்களின் அடிப்படையில் 25 பேருக்கும் வாக்குகள் கொடுக்கப்படும்.

இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கலாம் அல்லது கலந்துகொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அவ்வளவு தான். கடன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து எல்லாம் ஓட்டு போட முடியாது. அதனால், பாகிஸ்தானுக்கு கடன் அளிக்கும் வாக்கெடுப்பில் தனது எதிர்ப்பை தெரிவித்து இந்தியா கலந்து கொள்ளவில்லை.

India - Pakistan:``தேசத்தைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறோம்"- Ceasefire குறித்து இந்திய ராணுவம்!

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க

India - Pakistan: `அனைத்து தாக்குதல்களும் நிறுத்தம்' - அறிவித்த இந்தியா... முடிவுக்கு வரும் மோதல்?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து... மேலும் பார்க்க

இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ... மேலும் பார்க்க

`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூரைத் தொடந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவானது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றா... மேலும் பார்க்க

"ராணுவத் தாக்குதலுக்கான பெயரைப் பாகிஸ்தான் இதிலிருந்துதான் எடுத்திருக்கிறது" - ஓவைசி சொல்வது என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீத இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்தது. இதற்கு எதிர்வி... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான்: அணு ஆயுதங்கள் குறித்த கேள்வி; பாகிஸ்தான் அமைச்சரின் பதில் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலையில், 'அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா?' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், "நான் உலகிற்குச் சொல்லிக... மேலும் பார்க்க