செய்திகள் :

"அகந்தை அகன்றது, அன்பு வென்றது" - 10 ஆண்டு காலத் தனிமைக்கு முற்றுப்புள்ளி - இயக்குநர் பிரியதர்ஷன்

post image

இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோயினி படமாக வெளியானது லோகா. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் முக்கிய நாயகியாக வலம் வருபவர் நடிகை கல்யாணிப் பிரியதர்ஷன். இவருடைய அப்பா இயக்குநர் பிரியதர்ஷன் பல மெகா ஹிட் படங்களை இயக்கியவர். இவரும் நடிகை லிஸியும் 1990-ல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு கல்யாணி, சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இதற்கிடையில், சுமார் 24 ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகு 2014-ல் இந்த தம்பதியினர் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். 2016-ல் இவர்களது விவாகரத்து முறைப்படி முடிவுக்கு வந்தது.

கல்யாணி பிரியதர்ஷன்

இந்த நிலையில், தற்போது பிரியதர்ஷனும் லிஸியும் சேர்ந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த இயக்குநர் பிரியதர்ஷன், ``நாங்கள் 32 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். இடையில் சலிப்பும், ஈகோவும் எங்களை ஆட்கொண்டன. அதனால் யார் பெரியவர் என்ற விவாத்தாலேயே பிரிந்தோம். ஆனாலும், எங்களுக்குள் ஒரு உண்மையான காதல் எங்கோ மறைந்திருந்தது. வயதான காலத்தில் ஒரு துணை மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து மீண்டும் சேர்ந்தோம். இது மிகவும் எளிமையான முடிவு. தற்போதைக்கு மறுமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை. நாங்கள் ஒரு தம்பதியாகவே வாழ்ந்து வருகிறோம்." என்றார்.

இந்தத் தம்பதியினர் மீண்டும் இணைவதற்கு இவர்களது பிள்ளைகளான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். கடந்த 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள லிஸியின் ஸ்டுடியோவிற்கு நடிகர் மம்மூட்டி நேரில் வந்து, இந்த தம்பதியினரைச் சந்தித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பிரியதர்ஷன் தற்போது அக்‌ஷய் குமார் நடிப்பில் 'பூத் பங்களா' என்ற பட வேலையில் பரபரப்பாக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

தென்னிந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் டாப் 4 Gen Z மலையாள நாயகிகள்!

யதார்த்தமான கதைகள், உணர்வுப்பூர்வமான நடிப்பு - இதுதான் மலையாள சினிமாவின் அடையாளம். ஆனால் இன்று அந்த அடையாளத்தைத் தாண்டி, சமூக வலைத்தளங்களின் ரீல்ஸ் முதல் தியேட்டர் ஸ்கிரீன் வரை தென்னிந்திய ரசிகர்களின்... மேலும் பார்க்க

"நூற்றுக்கணக்கான நடிகர்கள்; 100 நாள்கள் படப்பிடிப்பு!"- ‘பள்ளிச்சட்டம்பி’ படம் குறித்து டொவினோ தாமஸ்

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்த... மேலும் பார்க்க

'துல்கர் சல்மானுக்கும் எனக்கும் பிரச்னையா?'- டொவினோ தாமஸ் விளக்கம்

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்த... மேலும் பார்க்க

"அப்பா அந்த சமயத்துல இறந்துட்டாரு; நான் சினிமாவுக்கு வந்தது அம்மாவுக்கு பிடிக்கல.!"- நிவின் பாலி

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி தனது முதல் படமான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்பின் ஆடிஷன் குறித்து பகிர்ந்திருக்கிறார். மலையாள ஊடகமான மனோரமாவிற்கு அளித்திருக்கும் பேட்டியில் பேசியிருக்கும் ந... மேலும் பார்க்க

Drishyam 3: 'த்ரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு; காரணம் என்ன?

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது மோகன்லாலின் 'த்ரிஷ்யம் 3'. ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் முன்பு ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவித்திருந்தார்கள்.... மேலும் பார்க்க

'அது இல்லாமல் சாத்தியமில்லை!'; முதல் படமும் 100-வது படமும் மோகன்லால் உடன் தான் - வெளியான அப்டேட்

சீனியர் இயக்குநர் பிரியதர்ஷன் அவருடைய 100-வது படத்தை இயக்குவதற்கு தயாராகிவிட்டார். 1984-ல் இவருடைய முதல் படமான 'பூச்சக்கொரு மூக்குத்தி (Poochakkoru Mookkuthi)' திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில... மேலும் பார்க்க