புதிய ஃபைனான்ஷியல் இயர்... உங்கள் வாழ்க்கை மாற இந்த 5 விஷயங்களை செய்யுங்க!
"நூற்றுக்கணக்கான நடிகர்கள்; 100 நாள்கள் படப்பிடிப்பு!"- ‘பள்ளிச்சட்டம்பி’ படம் குறித்து டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி இருக்கிறார்.
ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (மார்ச்.30) நடைபெற்றது. இதில் டொவினோ தாமஸ் கலந்துகொண்டார்.

"2018 ஆம் ஆண்டே இப்படத்தின் கதையை பற்றி நானும், டிஜோ ஜோஸும் (இயக்குநர்) விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை வடிவமைத்து 2025-ம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம்.
நாங்கள் இருவரும் வேறு வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அதனால் இப்படத்தின் பணிகளை தொடங்க தாமதம் ஆனது. நூறு நாள்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது.
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. இது ஒரு பீரியட் மூவி.
1957- 58 காலகட்டத்தைச் சார்ந்த படம். அந்தக் காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும். இது உண்மைச் சம்பவம் அல்ல.

ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்தப் படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்று பேசியிருக்கிறார்.


















