செய்திகள் :

பாஜக-வில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ் - மே.வங்க தேர்தலில் போட்டியா?!

post image

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து மொத்தம் 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பரபரப்பான சூழலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயாஸ் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார்.

அவர் இன்று டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கிரண் மற்றும் சுகந்தா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

லியாண்டர் பயாஸ்

கட்சியில் சேர்ந்த பிறகு லியாண்டர் பயாஸ் அளித்த பேட்டியில், “நாட்டின் இளைஞர்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணம் எனது வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வாய்ப்பிற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியில் சேர்ந்தது ஒரு உறுப்பினராக மட்டுமல்லாமல் தேசத்திற்கு சேவை செய்யும் முக்கிய பொறுப்பு இருப்பதால் சேர்ந்துள்ளேன். நான் மேற்கு வங்கத்தில் பிறந்து, பெங்காலி பாரம்பர்யத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

லியாண்டர் பயாஸ் தாயார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். சமீபத்தில் பா.ஜ.க தலைவர் நிதின் நபினை கொல்கத்தாவில் லியாண்டர் பயாஸ் சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து பயாஸ் பா.ஜ.க-வில் சேர்ந்து இருக்கிறார். அவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்குமரன் காங்கிரஸில் சேர்ந்தது முதல் பாமக-விலிருந்து நீக்கப்பட்டது வரை! - நடந்தது என்ன?

குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னையால் இரண்டாகப் பிளவுபட்ட பாமக-வில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. அன்புமணி, ராமதாஸ், ஜி.கே.மணிஅதே நேரம், ட... மேலும் பார்க்க

`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட...'- ஈரான் போரில் ட்ரம்ப்-ன் அடுத்த பிளான்?

ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில் சம்பந்தப்பட்டுள்ள ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை. இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண... மேலும் பார்க்க

ஈரான் போருக்கு ஆகும் செலவுகள்; அரபு நாடுகளின் தலையில் கட்டப்போகிறாரா ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானைத் தாக்கத் தொடங்கின. முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்தப் போர் இன்னும் முடிந்தபாடில்லை… தொடர்ந்துகொண்டே இர... மேலும் பார்க்க

``தேர்தல் வாக்குறுதி என்று சொல்லாதீர்கள், அவை வெறும் இலவச அறிவிப்புகள்" - சீமான் காட்டம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று கொளத்தூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள சென்றது தொடர்பாக விஜய் மீது 5 பிர... மேலும் பார்க்க

புதுச்சேரி: 291 வேட்பாளர்களில் 66 பேர் மீது கிரிமினல், பாலியல் வழக்குகள்! -அதிர வைக்கும் ரிப்போர்ட்

புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வேட்பாளர்களின் சொத்து மற்றும் குற்ற வழக்குகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் புதுச்... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்கு: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முடக்க நினைத்த அதே பாணி..." - ஆதவ் அர்ஜுனா

சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச் சென்று பிரசாரத்தையும் வேட்பாளர்கள் தொடங்கிவிட்டனர். த.வெ.க சார்பில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராக த... மேலும் பார்க்க