செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு!

post image

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் வான்வழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் இந்தியாவால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் விமான ஓடுதளம், ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் தகா்க்கப்பட்டன.

இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக அமெரிக்கா நடத்திய பேச்சுவாா்த்தையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பாக அமெரிக்காவில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில் தேசிய நலன்கள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கையளிக்க, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அதேபோல், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற ஏப். 22-ஆம் தேதி முதல் கடந்த 18 நாள்களில் நடந்த நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கவும், தேசம் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்தகட்ட திட்டங்களைத் தீா்மானிக்கவும் உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்’ எனக் குறிப்பிட்டாா்.

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க

மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக சுகாதார அமைச்சர்

கர்நாடகத்தில் கரோனா தொற்று படிபடியாக அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்ல என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், ... மேலும் பார்க்க