செய்திகள் :

இனி ரூபாய் நோட்டு பேப்பரில் வராது; 'பிளாஸ்டிக்கில்' வரப்போகிறது? - RBI-க்கு ஏன் இந்த யோசனை?

post image

இதுவரை இந்திய ரூபாய் நோட்டுகளைத் தாள்களில் தானே பார்த்திருக்கிறோம். இனி பிளாஸ்டிக்கில் பார்த்தாலும் பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது புழக்கத்தில் இருக்கும் தாள், எளிதாக கிழிந்துவிடுகிறது. இதனால் மீண்டும் அச்சிடும் செலவும் அதிகமாக உள்ளது.

இதையெல்லாம் தவிர்க்கத் தான், பாலிமரில் ரூபாய் நோட்டை அச்சிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பணம்
பணம்

இந்திய ரூபாயை தாளில் இல்லாமல், பாலிமரில் அச்சிடுவதால்...

> 2025-ம் ஆண்டில், மத்திய அரசுக்கு இந்திய ரூபாயை அச்சிடுவதற்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி ஆகியிருக்கிறது. பாலிமரில் ரூபாய் தாள்களை அச்சிட்டால், இந்தச் செலவு குறையும்.

> அடுத்ததாக, பாலிமரில் அச்சிடும் ரூபாய் கிழியாமல், பாழாகாமல் நீண்ட காலத்திற்கு பயன்படும் என்பதால், அதிலும் கணிசமான செலவு மிச்சமாகும்.

> இந்தியாவில் ஏ.டி.எம்கள் அப்கிரேட் செய்யப்பட்டுவிட்டன. அதனால், பாலிமரில் ரூபாய் அச்சிடப்பட்டாலும், அதில் சிக்கல் எழாது.

முன்பே...

2012-ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதே, பாலிமரில் ரூபாயை அச்சிடுவதற்கான பிளான் கொண்டுவரப்பட்டது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்னைகளால் இந்த முடிவு கைவிடப்பட்டது.

ஆனால், இப்போது அந்தப் பிரச்னைகள் எட்டிப்பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

தற்போது உலக அளவில் 60 நாடுகள் பாலிமர் பணத்தைப் பயன்படுத்தி வருகின்றன. 1988-ம் ஆண்டு ஆஸ்திரேலியா முதன் முறையாக இந்த வகையான பணத்தை அறிமுகப்படுத்தியது.

அதன் பின், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் பாலிமர் பணத்தைப் பயன்படுத்தி வருகிறது.

இந்தப் பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க

``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை ம... மேலும் பார்க்க

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! - Album

ஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில... மேலும் பார்க்க

மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே... இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்... மேலும் பார்க்க

C-295: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானம்; `Make in India’ வரலாற்றுச் சாதனை!

இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய 'ஆவ்ரோ-748' (Avro-748) ரக விமானங்களுக்குப் ஓய்வளித்துவிட்டு, அதிநவீன வசதிகள் கொண்ட 56 புதிய C-295 போக்குவரத்த... மேலும் பார்க்க