செய்திகள் :

இனி ரூபாய் நோட்டு பேப்பரில் வராது; 'பிளாஸ்டிக்கில்' வரப்போகிறது? - RBI-க்கு ஏன் இந்த யோசனை?

post image

இதுவரை இந்திய ரூபாய் நோட்டுகளைத் தாள்களில் தானே பார்த்திருக்கிறோம். இனி பிளாஸ்டிக்கில் பார்த்தாலும் பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது புழக்கத்தில் இருக்கும் தாள், எளிதாக கிழிந்துவிடுகிறது. இதனால் மீண்டும் அச்சிடும் செலவும் அதிகமாக உள்ளது.

இதையெல்லாம் தவிர்க்கத் தான், பாலிமரில் ரூபாய் நோட்டை அச்சிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பணம்
பணம்

இந்திய ரூபாயை தாளில் இல்லாமல், பாலிமரில் அச்சிடுவதால்...

> 2025-ம் ஆண்டில், மத்திய அரசுக்கு இந்திய ரூபாயை அச்சிடுவதற்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி ஆகியிருக்கிறது. பாலிமரில் ரூபாய் தாள்களை அச்சிட்டால், இந்தச் செலவு குறையும்.

> அடுத்ததாக, பாலிமரில் அச்சிடும் ரூபாய் கிழியாமல், பாழாகாமல் நீண்ட காலத்திற்கு பயன்படும் என்பதால், அதிலும் கணிசமான செலவு மிச்சமாகும்.

> இந்தியாவில் ஏ.டி.எம்கள் அப்கிரேட் செய்யப்பட்டுவிட்டன. அதனால், பாலிமரில் ரூபாய் அச்சிடப்பட்டாலும், அதில் சிக்கல் எழாது.

முன்பே...

2012-ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதே, பாலிமரில் ரூபாயை அச்சிடுவதற்கான பிளான் கொண்டுவரப்பட்டது. ஆனால், தொழில்நுட்பப் பிரச்னைகளால் இந்த முடிவு கைவிடப்பட்டது.

ஆனால், இப்போது அந்தப் பிரச்னைகள் எட்டிப்பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

தற்போது உலக அளவில் 60 நாடுகள் பாலிமர் பணத்தைப் பயன்படுத்தி வருகின்றன. 1988-ம் ஆண்டு ஆஸ்திரேலியா முதன் முறையாக இந்த வகையான பணத்தை அறிமுகப்படுத்தியது.

அதன் பின், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் பாலிமர் பணத்தைப் பயன்படுத்தி வருகிறது.

இந்தப் பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

22 வயதில் ஐபிஎஸ்; `தமிழ்நாட்டின் புதிய டிஜிபி' - மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா தொடர்ந்து தள்ளிப் போவது ஏன்?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க, 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்கள், ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் புதிய ஆட்சியை அமைத்தார். முதல்வரா... மேலும் பார்க்க

பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர் விஜய்! - முன்னாள் முதல்வர்கள் பின்பற்றிய மரபை உடைப்பது முறையா?

முதல்வர் விஜய் அவர்கள் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் கூப்பிட கூப்பிட, எந்த பதிலும் சொல்லாமல் போன அந்த வீடியோ தான் இணையதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.ஏன் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை தவிர்க்கி... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: `சுவாமி தரிசனமா, ரூ.4,000 ஜிபே.!' - அமைச்சரிடமே வசூல் வேட்டை நடத்திய அர்ச்சகர்கள்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

ஆதார் அப்டேட்டுகளை 'முற்றிலும் இலவசமாக' செய்துகொள்ளலாம்; இதற்கு UIDAI சொல்லும் சூப்பர் வழி!

இந்தியாவில் எங்கேயும், எப்போதும் கேட்கப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று - ஆதார் கார்டு. அந்த ஆதார் கார்டை அப்-டு-டேட்டாக வைத்திருப்பது மிக மிக அவசியம். ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மாறியி... மேலும் பார்க்க

`தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் வான்வழி அமைப்பு டு மேகதாது! - விஜய் மோடியிடம் வைத்த கோரிக்கைகள்

தவெக தலைவர் விஜய், முதல்வராக பதவியேற்றப் பிறகு முதல் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார். அங்கு இன்று பிரதமர் மோடியைச் சந்தித்தவர் அவரிடம் மாநில அரசின் நலனுக்காவும் முன்னேற்றத்திற்காகவும் சில கோ... மேலும் பார்க்க