செய்திகள் :

5 மாத திட்டம்; க்ரைம் படங்கள் - தாயை துன்புறுத்திய தந்தை, சித்தி உட்பட 4 பேரை கொன்று எரித்த மைனர்

post image

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் அருகில் ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்சிங். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி சர்க்யன் மற்றும் ராம் சிங்கின் தாயார் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் அவர்கள் வசித்த வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இது விபத்து என்றே போலீஸார் நினைத்தனர். ஆனால் எரிந்து நின்ற காரை தடயவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது காரின் முன்இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை. அதோடு சர்க்யன் உடம்பில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸார் ராம் சிங் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது அவரது முதல் மனைவி சுனிதா தனது கணவர் அவரது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது வாக்குமூலத்திற்கும், காரில் இறந்து கிடந்தவர்களின் நிலைக்கும் முன்னுக்கு முன்முரணாக இருந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த ராம் சிங் மைனர் மகனிடம் விசாரித்தனர்.

அதோடு வீட்டில் ரத்தக்கரையும் சுவர்களில் இருந்தது. விசாரணையில் மைனர் மகன்தான் தனது தந்தை உட்பட 4 பேரையும் கொலை செய்து இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரி வர்தன் கூறுகையில்,''ராம் சிங் சவுத்ரியின் இரண்டாவது திருமணத்தைத் தொடர்ந்து குடும்பத்திற்குள் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளது. ராம் சிங் தனது மனைவியை மோசமாக நடத்தியதை கண்டு பிள்ளைகள் தந்தையிடம் வெறுப்பை வளர்த்துக் கொண்டனர். சிறுவன் வீட்டிற்குள் கட்டுப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததான். இதனால் குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரிஸ்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அவன் தொடர்ந்து பார்ப்பதையும் ஆன்லைன் கேம்களில் நீண்ட நேரம் செலவிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தான்.

5 மாதங்களாக திட்டம்

குற்றக் காட்சிகள், போலீஸ் நடைமுறைகள் மற்றும் குற்றவாளிகள் சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கும் வழிகளை அவன் ஆன்லைனில் ஆய்வு செய்துள்ளான். தனது தந்தையை கொலை செய்ய 5 மாதங்களாக திட்டமிட்டு இருப்பதாக நம்புகிறோம்'' என்றார்.

போலீஸாரின் விசாரணையில் ராம் சிங்கும், அவரது இரண்டாவது மனைவியும் இரவில் பீர் குடித்து விட்டு உறங்க சென்றுள்ளனர்.

அவர்கள் உறங்கும் வரை மைனர் சிறுவன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான். அதிகாலை 4 மணிக்கு அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது மைனர் சிறுவன் தனது தந்தையும், சித்தியும் உறங்கிக்கொண்டிருந்த அறைக்குள் சென்றான்.

கணவனை கொலை செய்ய உதவிய மனைவி

உள்ளே சென்று தனது தந்தையை மைனர் கத்தியால் குத்தினான். அவரது சத்தத்தை கேட்டு அருகில் உறங்கிக்கொண்டிருந்த சர்க்யன் எழுந்தார். அவர் தனது கணவனை காப்பாற்ற முயன்றார். அவர்களின் சத்தத்தால் ராம் சிங் தாயார் பூசி தேவி மற்றும் உறவினர் மஹிமா உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்கள் அறைக்குள் வந்தனர். அதோடு குற்றம் சாட்டப்பட்ட மைனரின் தாய் மற்றும் மைனரின் சகோதரியும் அறைக்குள் நுழைந்து சுர்க்யான், பூசி தேவி மற்றும் மஹிமாவைக் கொலை செய்ய மைனருக்கு உதவியதாக போலீஸார் தெரிவித்தனர்.

குடும்ப நிதி, நிலப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிக் கணக்குகளை மஹிமா நிர்வகித்து வந்தார். மஹிமாவும், சுர்க்யனும் சேர்ந்து ராம் சிங் சவுத்ரியிடம் இருந்த சொத்துக்களை அபகரிக்கக்கூடும் என்ற அச்சம் குடும்பத்தில் இருந்த மற்றவர்களுக்கு இருந்தது. கொலையை விபத்தாக மாற்ற அவர்கள் உடல்களை காரில் போட்டு தீவைத்தனர். ஆனால் அவர்கள் கொலை செய்ய கத்தியால் குத்தியிருந்தனர். இதனால் கத்திக்குத்து காயங்கள் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்பதை காட்டிக்கொடுத்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.

திருமண வீட்டில் பயங்கரம்!முகமூடி கும்பல் அரிவாள் வெறியாட்டம் – 6 பேர் படுகாயம்; 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ரத்த வெள்ளமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று சினிமாப் படக் காட்சியை... மேலும் பார்க்க

புனேயில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மகாராஷ்டிரா வில் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் சிஞ்ச்வாட் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தால் 8 பேர் உயிரிழந்தனர். ... மேலும் பார்க்க

சென்னை: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்!

வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க

திருவள்ளூர்: குடிக்கத் தண்ணீர் கேட்ட வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை - மூவரிடம் போலீஸ் விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பகுதியில் உள்ள ராமராஜன் கண்டிகை கிராமத்தில் பெண் ஒருவர் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் வீட்டின் வெளிபக்க இரும்பு கேட்டை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்... மேலும் பார்க்க

கணவர், அவரின் 2-வது மனைவி உட்பட 4 பேரை கொன்று எரித்த பெண்; கதறி அழுது நாடகம்... சிக்கியது எப்படி?!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்தவர் ராம் சிங் செளதரி. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம் சிங் 2005ம் ஆண்டு சுனிதா என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணத்தின் ம... மேலும் பார்க்க

கன்னியாகுமரி சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: காவலர் கைது; விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவன், கடந்த 25-ம் தேதி தன் பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தன் மாமா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவ... மேலும் பார்க்க