செய்திகள் :

திருமண வீட்டில் பயங்கரம்!முகமூடி கும்பல் அரிவாள் வெறியாட்டம் – 6 பேர் படுகாயம்; 4 பேர் கைது

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ரத்த வெள்ளமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று சினிமாப் படக் காட்சியை மிஞ்சும் வகையில் ஊருக்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

நெட்டூர் மாதா கோவில் தெருவில் உள்ள திருமண வீட்டில் நேற்று இரவு பேனர் கட்டுவது தொடர்பாக சில இளைஞர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மதுபோதையில் வந்த ஒருவர் தகராறில் ஈடுபட்ட நிலையில், ஊர் பெரியவர்கள் தலையிட்டுப் பிரச்சினையைச் சமரசம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் மாலை திருமண வீட்டின் அருகே மேளதாளத்துடன் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது திடீரென முகமூடி அணிந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் அரிவாள்களுடன் ஊருக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தினர் அலறியடித்து ஓடிய நிலையில், கும்பல் கண்ணில்பட்டவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அருகிலுள்ள கடை ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் நெட்டூரைச் சேர்ந்த ரமேஷ் (49), அவரது மகன் அருள்மாறன் (23), சந்தோஷ்குமார் (21), ராயப்பன் (18), ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (20) மற்றும் திருமண நிகழ்ச்சிக்காக மேளம் வாசிக்க வந்த மாடசாமி (19) ஆகிய 6 பேர் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ரமேஷ், அருள்மாறன், ராயப்பன் மற்றும் ராம்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கும்பல் தப்பிச் சென்ற காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே 4 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண வீட்டில் புகுந்து நடத்தப்பட்ட இந்த அரிவாள் தாக்குதல் சம்பவம் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புனேயில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மகாராஷ்டிரா வில் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் சிஞ்ச்வாட் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தால் 8 பேர் உயிரிழந்தனர். ... மேலும் பார்க்க

சென்னை: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்!

வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க

திருவள்ளூர்: குடிக்கத் தண்ணீர் கேட்ட வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை - மூவரிடம் போலீஸ் விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பகுதியில் உள்ள ராமராஜன் கண்டிகை கிராமத்தில் பெண் ஒருவர் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் வீட்டின் வெளிபக்க இரும்பு கேட்டை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்... மேலும் பார்க்க

கணவர், அவரின் 2-வது மனைவி உட்பட 4 பேரை கொன்று எரித்த பெண்; கதறி அழுது நாடகம்... சிக்கியது எப்படி?!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்தவர் ராம் சிங் செளதரி. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம் சிங் 2005ம் ஆண்டு சுனிதா என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணத்தின் ம... மேலும் பார்க்க

கன்னியாகுமரி சிறுவனுக்குப் பாலியல் தொல்லை: காவலர் கைது; விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவன், கடந்த 25-ம் தேதி தன் பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தன் மாமா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவ... மேலும் பார்க்க

சென்னை: மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பீகார் இளைஞர்கள்!

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிடுவார். அதைப் போல சம்பவத்தன்றும் மூதாட்டி அதிகாலை நேரத்தில் வீட்ட... மேலும் பார்க்க