செய்திகள் :

சென்னை: மூதாட்டிக்கு நடந்த கொடூரம் - கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பீகார் இளைஞர்கள்!

post image

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிடுவார். அதைப் போல சம்பவத்தன்றும் மூதாட்டி அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி வேளச்சேரி நோக்கி தனியாக நடந்துச் சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர்கள் இருவர், மூதாட்டியிடம் இந்த நேரத்தில் தனியாக எங்கு செல்கிறீர்கள் என்று விசாரித்திருக்கிறார்கள். அதற்கு மூதாட்டி, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கிறார். மூதாட்டியை நோட்டமிட்ட இளைஞர்கள், அவரிடம் அன்பாக பேசி பைக்கில் ஏற்றியிருக்கிறார்கள். பின்னர் வேளச்சேரிக்கு மூதாட்டியை அழைத்துச் சென்ற இளைஞர்கள், அங்குள்ள ஒரு பார்க்கில் அவரை கீழே இறங்கும்படி கூறியிருக்கிறார்கள். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டுப் பகுதிக்கு மூதாட்டியை தூக்கிச் சென்ற இருவரும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.

ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!
கைது

இதில் மூதாட்டி மயக்க மடைந்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், மூதாட்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். பொழுது விடிந்ததும் பார்க்கிற்கு வந்த பொதுமக்கள், மூதாட்டி ஒருவர், அரை குறை ஆடையுடன் மயங்கி கிடப்பதைப் பார்த்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர், போலீஸார், மூதாட்டியை மீட்டு எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை உறுதிபடுத்தியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக கிண்டி உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது மூதாட்டியை பைக்கில் அழைத்து வந்த இளைஞர்கள் குறித்த தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. குறிப்பாக பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பீகாரைச் சேர்ந்த முகமது ஆதில், முகமது என தெரியவந்தது. இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள உணவகங்களில் வேலைப்பார்த்து வருகிறார்கள். வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்குச் செல்லும் போதுதான் மூதாட்டியிடம் தவறாக நடந்திருப்பதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு இருவரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

ஸ்டேஷனில் 8 மணி நேரம்; மருத்துவமனையில் 10 மணி நேரம் - பாலியல் கொடுமை செய்யப்பட்ட சிறுமி அலைக்கழிப்பு

மகாராஷ்டிரா மாநிலம், பீட் என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை அவர் உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். மைனர் பெண்ணை கை, கால்களை கட்டிவிட்டு, கர்ச்சீப்பால் வாயை அடைத்துவிட்டு அந்த நபர்... மேலும் பார்க்க

ஆன்மிகம் டு நட்பு; நோ சொன்ன இளம்பெண்; AI மூலம் ஆபாசமாக சித்திரித்த சொற்பொழிவாளர் - கைதுசெய்த போலீஸ்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சுமித் சர்மா என்பவருடன் சமூக ஊடகம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. சுமித் சர்மா ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் ஆன்மிகம் தொடர்பாக அந்தப் பெண்ணுடன் சாட்டிங் செய்து வந்... மேலும் பார்க்க

நெல்லை: விஷம் வைத்து கொல்லப்பட்ட 3 வளர்ப்பு நாய்கள்; நாய் உடலுடன் எஸ்.பி அலுவலகம் வந்த நபர்

நெல்லை மாவட்டம், உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் துரை. இவர் தனது வீட்டுக்காவலுக்காக 3 சிப்பிப்பாறை நாய்கள் உட்பட 5 நாய்களை வளர்த்து வந்தார். இதில் சிப்பிப்பாறை நாய்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.20 ஆயிரம் முத... மேலும் பார்க்க

சிவகாசி: பெண்ணிடம் நகை, பணம் மோசடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறை!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி மீனாட்சி. பழனியப்பன் உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மீனாட்சிக்கு இ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் வைரநாமம், தங்கம் கொள்ளை? - உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் கருவறைக்குள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய, வைரம் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணமான 'வைரநாமம்' திருடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

`அவளை பிடிக்கவில்லை' - மனைவியை ரூ.1.5 லட்சத்துக்கு விற்று கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவன்

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் பாலன்பூரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல். இவர் தனது 26 வயது மனைவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறி காணவில்லை எனக்கூறி போலீஸில் புகார... மேலும் பார்க்க