செய்திகள் :

நெல்லை: விஷம் வைத்து கொல்லப்பட்ட 3 வளர்ப்பு நாய்கள்; நாய் உடலுடன் எஸ்.பி அலுவலகம் வந்த நபர்

post image

நெல்லை மாவட்டம், உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் துரை. இவர் தனது வீட்டுக்காவலுக்காக 3 சிப்பிப்பாறை நாய்கள் உட்பட 5 நாய்களை வளர்த்து வந்தார். இதில் சிப்பிப்பாறை நாய்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் மதிப்புடைது எனக் கூறப்படுகிறது.

கடந்த 21-ம் தேதி துரையின் நாய், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுடலைக்குமார் என்பவர் வளர்க்கும் நாயை கடித்துவிட்டது. இதுதொடர்பாக துரை மற்றும் சுடலைக்குமார் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி அலுவலகம்

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி, காலையில் துரை தனது 3 சிப்பிப்பாறை நாய்களை தனது வீட்டின் பின்புறம் கட்டிவைத்துவிட்டு வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். மதியம் அவரது மனைவி அந்த நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய துரை, நாய்களுக்கு உணவு வைக்கச் சென்றபோது 3 சிப்பிப்பாறை நாய்களும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளன. இதனையடுத்து துரை, மயங்கிய  நாய்களை அருகில் உள்ள பெட் கிளினிக்கிற்க்கு தூக்கிச் சென்றுள்ளார்.

நாய்களை பரிசோதித்த மருத்துவர் நாய்களுக்கு விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் அடுத்தடுத்து 3 நாய்களும் உயிரிழந்தன. இதுகுறித்து சந்தேகத்தின் பேரில் துரை, சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்ட எஸ்.பி  அலுவலகத்திற்கு ஆட்டோவில் இறந்த நாய்களை கொண்டு வந்து புகார் மனு அளித்தார்.

உயிரிழந்த சிப்பிப்பாறை நாய்

அந்த மனுவை பரிசீலித்த மாவட்ட எஸ்.பி., பிரசன்னகுமார், நாய்களை கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக உயிரிழந்த மூன்று நாய்களில் ஒரு நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். பிரேதப் பரிசோதனையில் நாய்க்கு விஷம் கலந்த உணவு வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த அறிக்கையையும் துரை, எஸ்.பி., அலுவலகத்தில் ஆதாரமாகச் சமர்ப்பித்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  

சிவகாசி: பெண்ணிடம் நகை, பணம் மோசடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறை!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி மீனாட்சி. பழனியப்பன் உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மீனாட்சிக்கு இ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் வைரநாமம், தங்கம் கொள்ளை? - உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் கருவறைக்குள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய, வைரம் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆபரணமான 'வைரநாமம்' திருடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

`அவளை பிடிக்கவில்லை' - மனைவியை ரூ.1.5 லட்சத்துக்கு விற்று கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவன்

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டம் பாலன்பூரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல். இவர் தனது 26 வயது மனைவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறி காணவில்லை எனக்கூறி போலீஸில் புகார... மேலும் பார்க்க

புனே: குடிபோதையில் கார் ஏற்றி இருவரைக் கொன்ற சிறுவன்; மகனின் ஜாமீனை ஆடிப்பாடி கொண்டாடிய தந்தை

புனேயில் கடந்த 2024ம் ஆண்டு இரவில் தேநீர் அருந்த வெளியில் வந்த ஒரு பெண் உட்பட இரண்டு எஞ்சினியர்களை மைனர் வாலிபர் ஒருவர் குடிபோதையில் கார் ஏற்றிக் கொன்றார். இக்கொலை சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. மை... மேலும் பார்க்க

வாணியம்பாடி: திருநங்கையைத் தாக்கிய இளைஞன் கைது; ஓராண்டு திருமண வாழ்க்கை; ஊர் சுற்ற பைக்

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் திருநங்கை பூமிகா. இவரும், கோனாமேடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் வல்லரசு என்பவரும் காதலித்து, ஓராண்டுக்கு முன்பு த... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ”காதலிக்க மறுத்த நர்சிங் மாணவி”- சக மாணவன் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான மாணவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இதே கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்... மேலும் பார்க்க