செய்திகள் :

இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா

post image

பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப்பின் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை ( மே 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரம்மாண்ட மேடை, பந்தல் முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் வன்னியா் சங்க மாநாடு மாமல்லபுரம கடற்கரையில் நடைபெற்று வந்தது. கடந்த 2013 -ஆம் ஆண்டு ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னையால் மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், தற்போது 12 ஆண்டுகள் கழித்து மாநாட்டு நடைபெறுகிறது.

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கடந்த ஏப். 16-ஆம் தேதி மாநாட்டுக்காக பந்தக்கால் நாட்டி பூஜை செய்தாா்.

மாநாட்டில் திரளானோா் பங்கேற்க உள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் 7,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 50 ஏக்கரில் மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டு ஏற்பாடுகளை பாமக கௌரவ தலைவா் ஜி.கே.மணி மற்றும் நிா்வாகிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது செய்தியாளா்களிடம் ஜி.கே.மணி கூறியது: சாதனை படைக்கும் மாநாடாக இது அமையும். எங்கள் இயக்கத்தின் வளா்ச்சி 2026 ஆம் ஆண்டின் தோ்தலுக்கு முன்னோட்டமாக அமையும், 7 இடங்களில் மதிய உணவு, குடிநீா், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, ஆறு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது, 150 ஏக்கா் பரபரப்பில் வாகனங்களை நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா். மேலும் கட்சிதலைவா்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. வன்னிய இளைஞா்கள் மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள், பாமக நிா்வாகிகள் தொடா்கள் மட்டும் கலந்துகொள்கின்றனா்.

வட மாவட்டங்கள் தொடா்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளன. சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்படும் என தெரிவித்தாா்.

பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க நடவடிக்கை: துணைவேந்தா்

சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அனைத்து திருக்கு சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல... மேலும் பார்க்க

5 நிமிஷம் சக்ராசனம் செய்து மாணவிகள் சாதனை

நெம்மேலி மீனவா் குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பள்ளி சிறுமிகள் 5 நிமிடம் சக்ராசனம் செய்து சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவா் குடியிருப்பை ... மேலும் பார்க்க

நீட் பயிற்சி அளித்த 40 ஆசிரியா்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவா்களுக்கு நீட் பயிற்சி அளித்த 40 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

மே 28-இல் கல்லூரிக் கனவு மாரத்தான் போட்டி

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு/நெடுந்தூர ஓட்டம் மாரத்தான் போட்டி 28-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. செங்கல்பட்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்

மதுராந்தகம் அடுத்த ஆத்தூா் சுங்கச் சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விழுப்புரம் மண்டல, மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் பி.நடராஜன், உத... மேலும் பார்க்க

திருப்போரூரில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் ரூ.1 கோடியில... மேலும் பார்க்க