செய்திகள் :

இன்ஸ்டாவில் திருமண பதிவுகள் நீக்கம் - காதலன் ஏமாற்றியதால் திருமணத்தை நிறுத்தினாரா ஸ்மிருதி மந்தனா?

post image

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலாஷ் முச்சல் என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் திருமணம் செய்து கொள்ள இருந்தார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடக்க இருந்த திருமணம் திடீரென நின்று போனது.

ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்தான் இத்திருமணம் நின்றுபோனதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் ஸ்மிருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார். அவரது திருமண முன்மொழிவு வீடியோ, நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் சங்கீத் படங்கள் என அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.

இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் திருமணம் நின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். வட இந்திய ஊடகங்களும் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. எனினும் சம்பந்தபட்டவர்கள் கூறினால் தான் எது உண்மை என்பது தெரிய வரும்.

மந்தனா இன்ஸ்டாகிராமில் இருந்து திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கியவுடன், நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர். ஒரு பதிவில், "ஏதோ பெரிய விஷயம் நடந்திருந்தால் தவிர, இதை அவர் நீக்கி இருக்க முடியாது" என்று கூறினார்.

உண்மையில் பலாஷ் தனது காதலி மந்தனாவை ஏமாற்றியதாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி இருக்கிறது. திருமண வேலைகளை செய்து கொண்டிருந்த பெண் நடன இயக்குனருடன் பலாஷிற்கு தொடர்பு இருப்பதாக சில பதிவுகள் கூறுகிறது. மேலும் பலாஷ் அப்பெண்ணுடன் சாட்டிங் செய்த விபரமும் சமூக வலைத்தள பக்கத்தில் பரவி வருகிறது. அது உண்மையாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது உண்மையாக இருந்தாலும், அவர்கள் எப்போது இது போன்ற சாட்டிங்கில் ஈடுபட்டனர் என்ற தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. திருமணத்திற்கு முந்தைய நாள் இந்த சாட்டிங் விபரம் வெளியில் கசிந்து இருக்கிறது என்பது கவனிக்கதக்கது.

ரெடிட்(Reddit) தளத்தில் தான் இந்த சாட்டிங் வெளியானது. இது குறித்து அத்தளத்தில் இருப்பவர்கள் அதிகமாக விவாதித்துள்ளனர். அதில் ஒருவர், `பலாஷ் தனது நிச்சயதார்த்தத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை முத்தமிட்டதாகக் கூறியுள்ளார். நடன ஒத்திகையின் போது இந்த சம்பவத்தை அவர்கள் கவனித்ததாக பல பெயர் குறிப்பிடப்படாதவர்கள் தெரிவித்தனர். ஒரு பயனர், "அவர்கள் இருவரையும் மக்கள் ஒன்றாக பார்த்தனர். இது ஒரு முறை நடந்த நிகழ்வு அல்ல" என்று மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

இருவரும் பகிர்ந்து கொண்ட சாட்டிங்கில் பலாஷ் அப்பெண்ணை வெகுவாக புகந்து பேசுகிறார். அதோடு தன்னுடன் நீச்சல் குளம், ஸ்பா மற்றும் ஜுகு கடற்கரைக்கு வரும்படி அவர் கேட்கிறார்.

பலாஷ் தாயார் சொல்வது என்ன?

இதற்கிடையே பலாஷும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது தாயார் அமிதா கூறுகையில், ''எனது மகனுக்கு மந்தனாவின் தந்தையுடன் மிகவும் நெருக்கம். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்து மருத்துவமனையிலேயே இருந்தான். அவன் மருத்துவமனையில் நான்கு மணி நேரம் அழுதுகொண்டிருந்தான். இதனால் அவனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. அங்கேயே அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இப்போது மும்பைக்கு கொண்டு வந்து கோரேகாவ் மருத்துமனையில் சேர்த்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

இதில் எது உண்மை என்பது குறித்து இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.!

மின்சாரம் பாய்ந்த பாம்பு; CPR கொடுத்து உயிரைக் காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ

குஜராத் மாநிலத்தின் வல்சாத் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்த பாம்பு ஒன்றுக்கு CPR செய்து உயிரைக் காப்பாற்றிய வனவிலங்கு மீட்பு நிபுணரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்கம்பியில்... மேலும் பார்க்க

AI Video: 90 வயது தாத்தாவுக்கு பேரன் கொடுத்த AI Gift; கண்கலங்கிய குடும்பம்; வைரலான வீடியோ!

90வது வயதை எட்டியுள்ள தனது தாத்தாவுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது பேரன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.தொழில்நுட்ப உலகில் 'செயற்கை நுண்ணறிவு' பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி... மேலும் பார்க்க

நாகாலாந்து: 'வெட்டுக்கிளி, பட்டுப்புழு, பூனை' - திகைத்த சுற்றுலாப் பயணி; வைரலான உணவுப் பட்டியல்

நாகாலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் வருடாந்திர ஹார்ன்பில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழா இப்போது தொடங்கி நடந்து வருகிறது. விழாவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்க... மேலும் பார்க்க

IndiGo: ஒரே நாளில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி; காரணம் என்ன?

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.நவம்பர் மாதத்தில் மட்டும் மொத... மேலும் பார்க்க

"சில்க் ஸ்மிதா பேருல மக்களுக்காக உதவுறேன், ஏன்னா.!" - நெகிழும் டீக்கடை குமார்!

ஈரோடு அகில்மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் குமார்.மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், கடந்த 20 வருடங்களாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் நேற்று ... மேலும் பார்க்க

Alpha Beard: தாடிக்குள்ளே 26 ஆங்கில எழுத்துக்கள்; பிரிட்டன் கலைஞரின் வைரல் வீடியோ!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது தாடி மற்றும் மீசையை ஆங்கில அகரவரிசையின் 26 எழுத்துக்களாக மாற்றி இணையத்தில் வைரலாக்கியுள்ளார்.'A' முதல் 'Z' வரையிலான அனைத்து எழுத்துக்களையும் தனது முகத்தில் உள்ள முடிக... மேலும் பார்க்க