செய்திகள் :

``இமய மலையாய் நிமிர வேண்டியவன், அதிமுக-வால் பாதாளத்துக்குச் சென்றேன்" - மனம் வெதும்பி பேசிய வைகோ

post image

ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர், "கடந்த காலத்தில் நான் சில பிழைகளைச் செய்திருக்கிறேன். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். நம்பகத்தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன். என் அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மையை சுக்கு நூறாக்கியது. அதிமுக பொதுச் செயலாளரான மறைந்த ஜெயலலிதா என்னை 19 மாதங்கள் சிறையில் அடைத்தார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதே அதிமுக-வுடன் உடன்பாடு வைத்தததை போன்ற பிழையான, தவறான, மன்னிக்க முடியாத ஒரு முடிவு.

நாம் திமுக-வுடன் கூட்டணி அமைத்தால் ஒரு இடம்கூட ஜெயிக்க முடியாது என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. 205 தொகுதிகளில் அதிமுக ஜெயிக்க போகிறது. அவர்களோடு கூட்டு வைத்தால் 25 எம்எல்ஏ-க்களுக்கு குறையாமல் நாம் சட்டசபைக்குள் பிரவேசிக்கலாம். கட்சி புத்துயிர் பெறும். இதை விட்டுவிட்டால் சந்தர்ப்பம் மீண்டும், மீண்டும் நம் கதவை தட்டாது. இந்த வாய்ப்பை விட்டு விட்டால் எதிர்காலமே நமக்கு கிடையாது என்று அதிமுக-வினர் ஆணித்தரமாக சொன்னபோது, திருச்சி திமுக மாநாட்டில் பேசுவதற்காக எனது குறிப்புகளை பெட்டியிலே வைத்து, மலைக்கோட்டை ரயிலுக்கு பயணத்தையும் உறுதி செய்துவிட்டு, தலைமை நிர்வாகிகள் என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள்.

வைகோ, ஜெயலலிதா
வைகோ, ஜெயலலிதா

அப்போதுதான் அந்த முடிவை எடுக்க நேர்ந்தது. கலை உலகிலே பிரமாண்டமான திரைப்படங்கள் தந்த பாலச்சந்தரின் அரங்கேற்றம் படத்தின் கதாநாயகி போல ஆகிவிட்டேன். என் நம்பகத்தன்மையை அழித்துக் கொண்டு இந்த முடிவுக்கு வந்தேன் என்று நான் சொன்னேன். இன்று இமயமாய் நிமிர வேண்டிய நான், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் படு பாதாளத்திற்கு போனேன். மீண்டும் அப்படி நான் ஆளாகி விடக்கூடாது என்பதற்காக திமுக-வுடன் கூட்டணியுடன் வலுவான தோழமை சக்தியாக உள்ளேன்" என்றார்.

`இரவினில் ஆட்டம்; பகலில் தூக்கம்; இதுதான் துணை முதல்வர் உலகம்" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், "முதல்வர் ஸ்டாலின் அதிமுக, பாஜக-வுக்கு ... மேலும் பார்க்க

பாஜக-வை எதிர்க்காத விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா? - குழப்பத்தில் கதர்கள்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் விலகிச் சென்ற அ.தி.மு.க-வை, என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவந்த டெல்லி பா.ஜ.க., 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வீழ்த்த பல்வேறு அஸ்திரங்களை கையிலெடுத்திருக்... மேலும் பார்க்க

சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ... மேலும் பார்க்க

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது. அதன் கீழ், சில நடைமுறைகள் மாறும் அல்லவா? அப்படிப் பான் கார்டு எங்கெங்கு தேவை என்பதைப் பார்க்கலாம்... வாங்க...1. முன்பு, ஒரே ந... மேலும் பார்க்க

கலைஞர் உரிமைத் தொகை: ``வங்கி கணக்கில் ரூ.5000" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கேட்டு தவெக-வினர் போலீஸில் மனு அளித்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு போலீஸார் தரப்பி... மேலும் பார்க்க