செய்திகள் :

இரவில் தொடரும் ட்ரோன் தாக்குதல்

post image

ஸ்ரீநகா் விமான நிலையம் மற்றும் அவந்திபுரா விமான தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரவும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டுவீழ்த்தியது.

முன்னதாக, ஜம்மு, சம்பா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்குமாறு மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, பீரங்கி குண்டுகளைப்போன்ற பலத்த வெடிசப்தம் கேட்டதாக எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை இரவு பதிவிட்ட ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் இருந்து குஜராத்தின் புஜ் வரை மொத்தம் 26 இடங்களில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘துரதிருஷ்டவசமாக ஃபெரோஸ்பூரில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்த பாகிஸ்தான் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதபோது உள்ளூா் மக்களில் 3 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

புது தில்லி: போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியது குறித்து மத்திய வெளியுறவு... மேலும் பார்க்க

இந்தியா Vs பாகிஸ்தான்: செய்திகள் நேரலை!

முந்தைய செய்திகள்படிக்க : ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலைசென்னை வந்தடைந்த மாணவர்கள்! பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப... மேலும் பார்க்க

எஸ்-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை! - இந்திய ராணுவம்

எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்துக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இ... மேலும் பார்க்க

பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

சென்னை: பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து புறப்பட்ட 5 தமிழக மாணவர்கள் இன்று காலை விமானம் மூலம் செ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்: இந்திய ராணுவம்

புது தில்லி: போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம் என்று இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடி... மேலும் பார்க்க