செய்திகள் :

இரவில் தொடரும் ட்ரோன் தாக்குதல்

post image

ஸ்ரீநகா் விமான நிலையம் மற்றும் அவந்திபுரா விமான தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரவும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டுவீழ்த்தியது.

முன்னதாக, ஜம்மு, சம்பா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்குமாறு மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, பீரங்கி குண்டுகளைப்போன்ற பலத்த வெடிசப்தம் கேட்டதாக எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை இரவு பதிவிட்ட ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் இருந்து குஜராத்தின் புஜ் வரை மொத்தம் 26 இடங்களில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘துரதிருஷ்டவசமாக ஃபெரோஸ்பூரில் குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்த பாகிஸ்தான் ட்ரோனை சுட்டுவீழ்த்தியதபோது உள்ளூா் மக்களில் 3 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க