செய்திகள் :

Vijay: 'ஜனநாயகன் NDA வுக்கு வர வேண்டும்!' - விஜய்க்கு தமிழிசை அழைப்பு

post image

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டிருக்கிறார்.

தமிழிசை
தமிழிசை

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைய வேண்டுமென்று விஜயகாந்த் நினைத்தார். அது நிறைவேற வேண்டும். அவர் பாரத பிரதமர் மோடி மீது மிகுந்த அன்புக் கொண்டவராக இருந்தார். 2014 -ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக கடுமையாக உழைத்தார்" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சிகளின் வாக்குகள் ஒன்றாக இருக்கவேண்டும். பிரியக்கூடாது என்றே எல்லோரும் கூறுகிறார்கள்.

விஜய் எங்களோடு வருவதுதான் அவருக்குப் பாதுகாப்பு என்ற நயினாரின் கருத்து யதார்த்தமான உண்மை. ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை" என்று தமிழிசை பேசியிருக்கிறார்.

தமிழிசை
தமிழிசை

விஜயகாந்தின் குருபூஜைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கியமான கட்சித் தலைவர்கள் பலருக்கும் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்' டார்கெட்

பாமகவில் தந்தை - மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான்.வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.இந்த நிலையில், ராமதாஸ் வீட... மேலும் பார்க்க

"தவெக-விற்குச் செல்ல செங்கோட்டையனை நான் தூண்டிவிட்டேனா?" - டிடிவி தினகரன் சொல்வது என்ன?

அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.டிடிவி தினகரன்அப்போது, "அரசியல் ரீதியாக எது நடந்தாலும் என... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டின்மீது வெறுப்புணர்ச்சி; பாஜக ஆதரவாளர்களே, ஒன்றிய அரசை கழுவி ஊற்றுகிறார்கள்!’ - ஸ்டாலின்

திருவண்ணாமலை, மலப்பாம்பாடி கலைஞர் திடலில், ரூ.2,095 கோடியில் முடிவுற்ற 314 பணிகளைத் திறந்துவைத்தல், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முதலமைச்சர் மு.... மேலும் பார்க்க

மீண்டும் அதிமுகவில் இணைந்த வேலுமணியின் நிழல் - பின்னணி என்ன?

கோவை அரசியல் களத்தில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்க முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அவரின் கள... மேலும் பார்க்க

``விவசாயி வேடமிட்டு, விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள்!’’ - விமர்சித்த ஸ்டாலின்

திருவண்ணாமலையில் இன்றைய தினம், வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசுகையில், ``நிலத்தில் நீரை பாய்ச்சியும்... மேலும் பார்க்க