செய்திகள் :

`இரவில் பயத்தில் வாழ்கிறோம்' - ஜூனியர் மாணவிகளை ராகிங் செய்த 19 மாணவிகள்

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத கல்லூரியில் படிக்கும் மாணவர்களை ராகிங் செய்வதாக நிர்வாகத்திற்கு புகார் வந்தது. குறிப்பாக மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் இரவு நேரத்தில் அதிக அளவில் ராகிங் நடப்பதாக மர்ம புகார் வந்தது.

அந்த புகாரில், முதலாம் ஆண்டு மாணவிகள் கடந்த 20 நாட்களாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். நாங்கள் பயமான சூழ்நிலையில் வசித்து வருகிறோம். இரவில்தான் ராகிங் நடக்கிறது.

Representational Image
Representational Image

இது குறித்து நிர்வாகத்திடம் புகார் செய்தாலும் கண்டுகொள்வதில்லை''என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரணையில் பெரும்பாலான முதலாம் ஆண்டு மாணவிகள் ராகிங் தொல்லைக்கு ஆளானதாகவும், அறிமுகம் என்ற பெயரில் இத்துன்புறுத்தல் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

அதோடு இது போன்ற செயலில் ஈடுபட்ட 19 மாணவிகளையும் முதலாம் ஆண்டு மாணவிகள் அடையாளம் காட்டினர். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் 19 மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்த 3 மாதத்திற்கு விடுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கல்லூரி கிளாஸில் பங்கேற்க முடியும். எதிர்காலத்தில் இதுபோன்று நடந்தால் சஸ்பெண்ட், கல்லூரியில் இருந்து நீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள விடுதி நிர்வாகம், மாணவிகளிடம் இதுதொடர்பாக எழுதி வாங்கிக்கொண்டுள்ளது.

இது குறித்து அரசு ஆயுர்வேதக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் டாக்டர் ராஜேந்திர சோனேகர் கூறுகையில், "ராகிங் குறித்த தகவல் கிடைத்ததும், நாங்கள் ராகிங் தடுப்புக் குழுவை அமைத்தோம், அதில் ஜூனியர் மற்றும் சீனியர் மாணவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, 19 மாணவிகள் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. அவர்கள் விடுதியிலிருந்து 3 மாதத்திற்கு நீக்கப்பட்டுள்ளனர். இந்தத் துன்புறுத்தலில், சீனியர்கள் முன் ஜூனியர்கள் தலைகுனிந்து மணிக்கணக்கில் நிற்க வைக்கப்படுகின்றனர். அறிமுகம் என்ற பெயரில் நடக்கும் இச்செயல் மணிக்கணக்கில் நீளும். அதில் உடல்ரீதியான துன்புறுத்தல் எதுவும் இல்லை."என்று தெரிவித்தார்.

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்... மேலும் பார்க்க

சென்னை: செக்ஸ் டார்ச்சர்; மர்ம உறுப்பை வெட்டி இளைஞர் கொலை - சிறுவனுடன் கைதான தோழிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரக்சிகா என்பவரைக் காதலித்தார். ஆனால் இவர்களுக்குள் கருத்துவ... மேலும் பார்க்க

வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா?

வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீ... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டல்; இன்ஸ்டா பிரபலம் கைது!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டா மூலம் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பைக் ரேஸரான இவர், அதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாவில் தொ... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் விஷம் அருந்தி தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் பெர... மேலும் பார்க்க