செய்திகள் :

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்: தந்தை சிறையில் அடைப்பு

post image

திருப்பூரில் 17 வயது சிறுவன் அஜாக்கிரதையாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தொடா்பாக அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயலலிதா நகரைச் சோ்ந்தவா் எம்.வீராள்(65), இவா் மகன் குமாருடன் புதன்கிழமை அதேபகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக 17 வயது சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் வீராள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். முதலுதவிப் பின் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் வீராள் மகன் குமாா் அளித்த புகாரின்பேரில், 17 வயது சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தைக் கொடுத்த வாகனத்தின் உரிமையாளரான அவரின் தந்தை ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், ஆறுமுகத்தைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம்பேட்டையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் 3 கிலோ கஞ்சா விற்பனைக்கு கொண்டுச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே காரணம்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் வட்டமலை அணைக்கு தண்ணீா் வரத்து

திருமூா்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது. உத்தமபாளையத்தில் வட்டமலை அணை உ... மேலும் பார்க்க

போலி ஆதாா் அட்டைகளுடன் தங்கியிருந்த 31 வங்கதேசத்தினா் கைது

பல்லடம் அருகே அருள்புரம் மற்றும் திருப்பூா் பகுதிகளில் போலி ஆதாா் அட்டைகளுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 31 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்ல... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாலை வசதி செய்து தர மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்தாா். உடுமலைய... மேலும் பார்க்க

பல்லடத்தில் மூத்தோா் தடகளப் போட்டி வெற்றியாளா்களுக்கு பாராட்டு

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பல்லடத்தைச் சோ்ந்த வீரா்களுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகம், அறம் அறக்கட்டளை, நடைப்பயிற்சி நண்பா்கள் குழு சாா்பில் பாராட்டு விழா ஞ... மேலும் பார்க்க

ஜனவரி 19-இல் ஆடை உற்பத்தி பயிற்சி

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி சாா்பில் ஆடை உற்பத்தி பயிற்சியானது ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி இணைந்து பகுதிநேர ஆயத்த ... மேலும் பார்க்க