செய்திகள் :

இலங்கை சுதந்திர நாள்: பொருளாதார சுதந்திரமடைய ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் -அதிபர் திசநாயக

post image

கொழும்பு : அண்டை நாடான இலங்கை ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து கடந்த 1948-ஆம் ஆண்டு பிப். 4 அன்று சுதந்திரமடைந்து தனி நாடாக மாறியது. இந்த நிலையில், இலங்கையில் 77-ஆவது சுதந்திர நாள் விழா இன்று(பிப். 4) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, இலங்கையின் புதிய அதிபராகக் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவியேற்றுக்கொண்ட அநுர குமார திசநாயக தலைநகர் கொழும்புவில் அந்நாட்டின் தேசியக்கொடியேற்றி ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, சுதந்திர நாள் விழாவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், “பொருளாதாரத்தில் இலங்கை தன்னிறைவு பெற்ற நிலையடைய அனைத்து மக்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் கடந்தாண்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டதில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களின் பேராதரவுடன் அதிபராகப் பதவியேற்றுள்ள திசநாயக தலைமையிலான அரசு நிர்வாகத்தின்கீழ், இலங்கையின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டெழும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுவது குறிப்பிடத்தக்கது.

அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த அதிபர் திசநாயக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து, அவர் கடந்த மாதம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரிவிதிப்பில் புதிய மாற்றங்களை அறிவித்த டிரம்ப்!

அமெரிக்க பொருள்களுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் வரியே அந்தந்த நாடுகளுக்கு விதிக்கும் வகையிலான வரித் திருத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்துள்ளார். மானியங்கள், வாட் போன்றவற்றில் நியாயமற... மேலும் பார்க்க

உக்ரைனில் விரைவில் போர் நிறுத்தம்! பிரான்ஸ் வலியுறுத்தல்

உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு வெகுவிரைவில் முற்றுப்புள்ளி வைக்க பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஐரோப்பிய அவசரநிலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன் அமெரிக்க அதிபர் ட... மேலும் பார்க்க

வாஷிங்டனில் டிரம்ப், எலானுக்கு எதிராகப் போராட்டம்!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்று ஒரு மாதமாகும் நிலையில், அவருக்கு எதிராக வாஷிங்டனில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.மேலும், அரசுத் துறைகளில் தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு அளிக்கப்படும... மேலும் பார்க்க

பொய் சொன்னதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம்!

சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ.நா. மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் அறிவுறுத்தல்!

டெல் அவிவ் : பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. மீட்புப் பணிகள் முகமை(யு.என்.ஆர்.டபில்யூ.ஏ... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: அமெரிக்க பிரதிநிதிகளுடன் ரஷிய அமைச்சர் பேச்சுவார்த்தை!

மாஸ்கோ : ரஷியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்க அதிகாரிகளுடன் ரியாதில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இதற்காக அவர் இன்று அதிகாலை ரியாத் சென்றடைந்தார்.உக்ரைன் விவகார... மேலும் பார்க்க