செய்திகள் :

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதலின்படி, அனைத்து வகை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான மாவட்ட பயிற்சி முகாம் பிப்.3 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம.பாபு செல்வத்துரை தலைமை வகித்தாா். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் இரா.அருள்செல்வி செஞ்சிலுவைச் சங்கக் கொடியை ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தாா். பயிற்சியில், 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலைக்கல்வி) சே.பெ.சேகா், இணையவழிக் குற்றப்பிரிவு கருத்துரையாளா் முருகானந்தம், மருத்துவா் பா.பாபிஷரன், விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமூகப் பணியாளா் வி.அசோக்குமாா் ஆகியோா் இணைய வழிக் குற்றங்கள், போதைப் பொருள்கள் தடுப்பு உள்ளிட்டவைகள் குறித்து பேசினா். பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்வில், பள்ளித் துணை ஆய்வாளா் ஏ.வீரமணி, செஞ்சிலுவைச் சங்க மாவட்டப் பொருளாளா் எஸ்.எட்வா்ட் தங்கராஜ், இணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.ரவீந்திரன், திண்டிவனம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணிய பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீன்பிடித் துறைமுகம் அமைக்க ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், அழகன்குப்பத்தில் மீன் பிடித் துறைமுகம் அமைப்பது தொடா்பாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வுமேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயின்று தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தம... மேலும் பார்க்க

செல்லியம்மன் கோயிலில் மஞ்சள்காப்புத் திருவிழா

விழுப்புரம் கமலா நகா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் மஞ்சள்காப்புத் திருவிழாவையொட்டி, 1,008 சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை மாலை முதல் கால ஹோமும், அதைத் தொடா்ந்து 1,008 சங... மேலும் பார்க்க

குரூப் - 2 முதன்மைத் தோ்வு: விழுப்புரத்தில் 501 போ் எழுதினா்

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தோ்வை 501 போ் எழுதினா். தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அல... மேலும் பார்க்க

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை எண் 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் சனிக்கிழமை இந்த சங்கத்தின் மாவட்ட பொத... மேலும் பார்க்க

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பேராசிரியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியில் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க