செய்திகள் :

ஈரானிடம் இருந்து பெறப்படும் யுரேனியத்தை அமெரிக்கா என்ன செய்யும்? - ட்ரம்ப் 'நேரடி' பதில்!

post image

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கூட, 'தற்காப்பு தாக்குதல்' என்றே கூறப்பட்டுள்ளது. அதனால், ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பெரிய பின்னடைவு ஏற்படாது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே, அமெரிக்காவிற்கு ஈரான் மீதுள்ள கண்ணுறுத்தல், 'ஈரானிடம் இருக்கும் யுரேனியமும், ஈரான் கட்டமைத்து வரும் அணுசக்தியும் தான்'.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

இந்தப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் மையப்புள்ளியும் 'செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒப்படைப்பு' தான்.

தற்போது ஈரான் தங்களிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் தர ஒப்புக்கொண்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த நிலையில், ஈரானில் இருந்து கொண்டுவரப்படும் யுரேனியம் என்ன செய்யப்படும் என்று தனது ட்ரூத் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்...

"செறிவூட்டப்பட்ட யுரேனியம் (அணு உலைத் துகள்கள்!) உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும்.

அல்லது, ஈரானுடன் இணைந்து மற்றும் ஒருங்கிணைந்து, அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) அல்லது அதற்கு இணையான ஒரு அமைப்பின் முன்னிலையில், அது இருக்கும் இடத்திலேயே அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறொரு இடத்தில் வைத்து அழிக்கப்படும்".

"தமிழ்நாட்டில் மிக எளிதாக வெற்றி பெறுகிறார்கள்; எனக்கு பொறாமையாக இருக்கிறது" - பவன் கல்யாண்

"தமிழ்நாட்டில் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுகிறார்கள். ஆனால் என்னால் அது முடியவில்லை" என்று ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் சிரித்துக்கொண்டே பேசிய வீடியோ இணையத்தி... மேலும் பார்க்க

தவெக: "குதிரைபேர அரசியலை காங்கிரஸார் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது" - ஜோதிமணி கண்டனம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் நேற்று (மே.25) இணைந்தனர். இதனை அரசியல் தலைவர்கள், "தவெ... மேலும் பார்க்க

அதிமுக: `அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளை இசக்கி சுப்பையா' - ராஜினாமா செய்துவிட்டு தவெக தாவுகிறார்?

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இசக்கி சுப்பையா. அம்பாசமுத்திரம் தொகுதியின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்பட்ட இசக்கி சுப்பைய... மேலும் பார்க்க

பயிர்க்கடன் தள்ளுபடி: ``ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்.!" - பழனிசாமி கண்டனம்

நேற்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தார். அந்த அறிவிப்பு 'விஞ்ஞான ஏமாற்று வேலை' என்று சாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். ... மேலும் பார்க்க