செய்திகள் :

``ஈரானுக்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர் வழங்குகிறதா?" - அமெரிக்கத் துணை அதிபரின் விளக்கம் என்ன?

post image

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மறுசீரமைப்பு நிதியாக ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளதாக வெளியான தகவல்களை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிரபல ஊடகவியலாளர் மெகின் கெல்லி தொகுத்து வழங்கிய "தி மெகின் கெல்லி ஷோ" (The Megyn Kelly Show) நிகழ்ச்சியில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கலந்துகொண்டார். அவரிடம் ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்தப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

ஜே.டி. வான்ஸ்
ஜே.டி. வான்ஸ்

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், ``ஈரானுக்கு மறுசீரமைப்பு நிதியாக 300 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படவிருப்பதாக வெளியான செய்தி உணமையல்ல. அதற்குப் பதிலாக, இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த விதிமுறைகளை ஈரான் முறையாகக் கடைப்பிடித்தால், பிற நாடுகள் ஈரானில் முதலீடு செய்ய அனுமதிக்கும் திட்டமே எங்களிடம் இருக்கிறது.

ஈரான் தனது அணுசக்தி மற்றும் பிராந்தியச் செயல்பாடுகள் குறித்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டால், அந்நாட்டில் முதலீட்டை ஊக்குவிக்கவும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தவும் ஏதுவாக, அந்த இஸ்லாமியக் குடியரசு மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்

உதாரணமாக, இப்பிராந்தியத்தில் நமக்கு மிகச் சிறந்த நட்பு நாடுகளில் ஒன்றாகத் திகழும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஈரானில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தில் முதலீடு செய்ய விரும்புகிறது என வைத்துக்கொள்வோம். உலகளாவிய நிதி அமைப்பில் தற்போதுள்ள சில தடைகளை நாம் நீக்கினாலன்றி, அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால், ஈரானியர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ளாத வரை, அமீரகத்தினர் அங்கு முதலீடு செய்வதை அமெரிக்கா அனுமதிக்கப்போவதில்லை.

எனவே, 'ஈரானுக்கு அமெரிக்கா நேரடியாக பணம் கொடுக்கிறது' என்று கூறுவது முற்றிலும் உண்மையல்ல. அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டால், அந்நாட்டை மறுகட்டமைக்கவும் மக்களின் செழிப்பை மேம்படுத்தவும் பிற நாடுகள் முதலீடு செய்ய நாங்கள் வழியமைப்போம்" என்று தெளிவுபடுத்தினார்.

"G7 நாடுகள் இனி உலகை ஆள முடியாது" - சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து கனடா பிரதமர்

உக்ரைன் விவகாரம், அமெரிக்கா-ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்க G7 அமைப்பு நாட்டின் தலைவர்கள் பிரான்சில் கூடியுள்ளனர். இந்த அமைப்பில்... மேலும் பார்க்க

'எல்லாருக்காகவும் திறந்திருக்கும் கதவு!' - தலைமைச் செயலகத்தில் கவனம் ஈர்க்கும் அமைச்சர் வன்னிஅரசு!

தலைமைச் செயலகத்தில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் அறை, ஒரு அமைச்சரின் அறைக்குரிய நடைமுறைகளை கடந்து விளிம்பு நிலை மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதாக ஒரு பேச்சு கோட்டை வட்டாரத்தில் அடிபட த... மேலும் பார்க்க

'தனி விமானம், ரூ.15 கோடி' - பணத்திற்கு விலைபோகும் எம்.பி.க்கள்? பாதுகாக்க போராடும் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 2022ம் ஆண்டு பிளவைச் சந்தித்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருந்து இரவோடு இரவாக காரில் குஜராத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன் பிறகு ஆ... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும் மோடி - மெலோனி சந்திப்பு; உலக அரங்கில் கவனம் ஈர்த்த 'மெலோடி' கூட்டணி!

உக்ரைன் விவகாரம், அமெரிக்கா-ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்க ஜி7 தலைவர்கள் பிரான்சில் கூடியுள்ளனர். இந்த உத்தியோகபூர்வ விவாதங்களுக... மேலும் பார்க்க

"வெள்ளை அறிக்கை மக்களைத் திசை திருப்புவதற்கான நாடகம்" – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் கடந்த ஐந்தாண்டு கால நிதி நிலவரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ளார்.கடந்த தி.ம... மேலும் பார்க்க

``அது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை" - தங்கம் தென்னரசு விமர்சனம் | Live Updates

வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!தங்கம் தென்னரசு ''தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெள... மேலும் பார்க்க