செய்திகள் :

"ஈரானை நோக்கி கப்பற்படையை அனுப்பியுள்ளேன்" - 'மீண்டும்' ஈரான் குறித்து ட்ரம்ப்

post image

பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் ஈரானில் உள்நாட்டுப் போராட்டம் பெரிதாக வெடித்துள்ளது.

இது தொடங்கியதில் இருந்தே போராட்டக்காரர்களுக்கு தன்னுடைய முழு ஆதரவு இருப்பதாக தொடர்ந்து பதிவு செய்து வந்தார் ட்ரம்ப்.

ஈரான் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு அந்த நாட்டு ஏதாவது செய்தால், ‘இதுவரை இல்லாத தாக்குதல் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

கடந்த வாரம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது ஈரான் அரசு. இதனால், அந்த ராணுவ மிரட்டலை கைவிட்டார் ட்ரம்ப்.

இப்போது மீண்டும் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறித்து பேசத் தொடங்கியுள்ளார்.

ஈரான்
ஈரான்

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது…

“ஈரானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஈரானை நோக்கி அமெரிக்காவின் பெரும் கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது.

அநேகமாக அதை பயன்படுத்துவது போல இருக்காது. ஆனால், தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்கு கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன” என்று பேசியுள்ளார்.

ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம், ஈரான் – இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருந்த போது, ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தது அமெரிக்கா.

இப்போது என்ன நடக்க உள்ளதோ?

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' - 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்க... மேலும் பார்க்க

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வர... மேலும் பார்க்க

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க