செய்திகள் :

ஈரான் அமைதி ஒப்பந்தம் முடிவாகிறதே... ஹார்முஸ் நீர்ச்சந்தி எப்போது திறக்கப்படும்? சுங்க வரி உள்ளதா?

post image

ஈரானில் போர் தொடங்கியது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், உலக நாடுகளை நேரடியாகப் பாதித்த ஒன்று - ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்.

இதனால், எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 115 டாலர்களை எல்லாம் தாண்டியது.

தற்போது ஈரான் அமைதி ஒப்பந்தம் வருகிற ஜூன் 19-ம் தேதி கையெழுத்தாகிறது என்று முடிவாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் அனைத்து உலக நாடுகளின் ஃபோக்கஸும் - ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தான்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

எப்போது திறக்கப்படும்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்பந்தம் குறித்த தனது சமூக வலைதளப் பதிவில், "வருகிற வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஹார்முஸ் நீர்ச்சந்தி மீண்டும் திறக்கப்படும்.

அதன் பிறகு இந்தப் பிராந்தியத்திற்கும், ஏன் ஒட்டுமொத்த உலகத்திற்குமே இரண்டு பக்கமிருந்தும் எண்ணெய் விநியோகம் மீண்டும் தடையின்றிப் பாயத் தொடங்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.

சுங்க வரி உள்ளதா?

ட்ரம்ப் அமெரிக்க நாளிதழான 'நியூயார்க் டைம்ஸிற்கு' கொடுத்துள்ள போன்கால் பேட்டியில், "ஈரான் உடனான ஒப்பந்தத்தில் ஹார்முஸ் நீர்ச்சந்தி நிரந்தரமாக இலவசமாகத் தான் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக, ஈரான் மற்றும் ஓமன் ஹார்முஸ் நீர்ச்சந்தி பயணத்திற்கு சுங்க வரி வசூலிக்காது என்று தெரிய வருகிறது.

இந்தப் பதில் எல்லாம் ட்ரம்ப் மற்றும் அமெரிக்கா தரப்பிடம் இருந்து மட்டுமே வருகிறது. ஈரான் இன்னும் எதையும் தெளிவுபடுத்தவில்லை என்பதை இதில் கவனிக்க வேண்டும்.!

`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' - அண்ணாமலை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து தொடர்ந்து சட்ட ஒழுங்கு சிக்கல்கள் நீடிப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆரவலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் விஜய் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறை அ... மேலும் பார்க்க

'ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது' - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முரண்படும் இஸ்ரேல்

வருகிற 19-ம் தேதி ஈரான் அமைதி ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் ஈரான் போரின் முக்கிய தரப்புகளில் ஒன்றான இஸ்ரேல் தனது கர... மேலும் பார்க்க

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்' காவல்துறை விளக்கம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று (ஜூன்.14) மாலை 3 வயது குழந்... மேலும் பார்க்க

‘’உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமை” - எடப்பாடியை விமர்சித்த சி.விஜயபாஸ்கர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.தவெக ஆட்சிக்கான நம்பிக்கை தீர்மானத்தில் ஆத... மேலும் பார்க்க

`இன்னுயிரையும் பொருட்படுத்தாத அர்ப்பணிப்பு'- கீர்த்தி சக்ரா தேனி ராணுவ வீரரை கௌரவித்த முதல்வர் விஜய்

கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) என்பது இந்தியாவில் அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய ராணுவ விருது ஆகும். போர்க்களத்தில் அல்லாமல், மற்ற இடங்களில் நிகழும் அசாதாரண வீர தீரச் செயல்களுக்காகவ... மேலும் பார்க்க

`கூகுளின் ரத்தக்கறை.!' - சுந்தர் பிச்சையை புறக்கணித்த ஸ்டான்ஃபோர்டு மாணவர்கள் - காரணம் தெரியுமா?

கலிஃபோர்னியாவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா. உலகமே உற்றுநோக்கும் அந்த மேடையில் சிறப்பு விருந்தினராகப் பேச வருகிறார் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி ... மேலும் பார்க்க