செய்திகள் :

ஈரான் Lock ஆன '5' விஷயங்கள்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டதன் விளைவு!

post image

ஈரான் - அமெரிக்கா போர் இன்னும் முடிந்தபாடில்லை.

அமெரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்க ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்துள்ளது.

ஈரானுக்கு நெருக்கடி கொடுக்க, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து ஈரானின் கப்பல் எதுவும் வெளியே செல்லாமல் இருக்க அங்கே அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது ஈரானை எப்படி பாதித்துள்ளது என்பதை அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்காட் பெசன்ட்
ஸ்காட் பெசன்ட்

"சாக்கடை குழாய்க்குள் இருக்கும் எலிகளுக்கு வெளி உலகில் என்ன நடக்கிறது என்று தெரிவது ரொம்ப கஷ்டம். இருட்டில் அமர்ந்திருக்கும் ஈரான் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்த சில விஷயங்கள்:

1. ஹார்முஸ் ஜலசந்தி இப்போது முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

2. உங்களிடம் அமெரிக்க டாலர் போன்ற அந்நியச் செலாவணிக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

3. உணவு மற்றும் பெட்ரோல் பங்கீடு அமலுக்கு வந்துவிட்டது.

4. ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டது.

5. பிப்ரவரி 27-க்கு முன்பு இருந்தது போன்ற 'சுதந்திரமான கப்பல் போக்குவரத்து' மீண்டும் அமலாகும் வரை, இந்த முற்றுகை தொடரும்".

"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்

நாளை மறுநாள் (மே 4), தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விசிகவினர் தேர்தல் பணிகள் குறித்து ... மேலும் பார்க்க

'தவெக-விடம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வலிமை இல்லை' - திருமாவளவன் பேச்சு

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியுள்ளதாவது..... மேலும் பார்க்க

'பைத்தியக்காரர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்று தான் ஈரான் போர்!' - ட்ரம்ப் காட்டம்

அமெரிக்கா ஈரான் மீது போர் தொடுத்ததற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று - ஈரான் செய்து வரும் அணு ஆயுதத் தயாரிப்பு. இப்போது பாகிஸ்தானில் நடந்து வரும் பேச்சுவார்த்தை தள்ளிப்போவதற்கான காரணமும் - இரு தரப்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில் மீண்டும் இன்று தேர்தல்: 'எங்களுக்கு தான் பெரும்பான்மை' - திரிணாமுல்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகியவை சட்டமன்ற தேர்தல் முடிந்து, ரிசல்டுக்காக காத்திருக்கின்றன. கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 29) தான், மேற்கு வங்கம் இரண்டாம் கட்ட தேர்தலை சந்தித்து ம... மேலும் பார்க்க