செய்திகள் :

ஈரோடு விஜய் பிரசாரம் தள்ளிவைப்பு: "சொல்லத்தான் நினைக்கிறேன்; உள்ளத்தால் துடிக்கிறேன்"- செங்கோட்டையன்

post image

"தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கு உரிய அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். இதுபோல விதிகள் அதிகம் இருப்பதால் அதையெல்லாம் நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படுகின்றன. அதனால் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்காக தேதி தள்ளி வைக்கப்படுகிறது" என்று தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

விஜய், செங்கோட்டையன்
விஜய், செங்கோட்டையன்

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் செங்கோட்டையன், "விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கு இதுவரை இல்லாத அளவிற்குக் கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்படுகின்றன.

மொத்தம் 84 விதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக மழை பெய்தால் என்ன செய்வீர்கள், வெயில் அடித்தால் என்ன செய்வீர்கள் என்றெல்லாம் இதுவரை இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டிருக்கின்றன. இதுபோல விதிகள் அதிகம் இருப்பதால் அதையெல்லாம் நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படுகின்றன.

அதனால் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்காக தேதி தள்ளி வைக்கப்படுகிறது. ஆலோசனை நடத்திய பின்பு சரியான தேதியை அறிவிப்போம்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களின் பெயர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள். கூட்டத்திற்கு வருபவர்களின் பட்டியலை எப்படி கொடுக்க முடியும்.

அவர்கள் கொடுத்த விதிகளை எல்லாம் கேள்வி கேட்க முடியாது. அப்படியெல்லாம் கேள்வி கேட்டால் கரூர் சம்பவ வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அனுமதியை மறுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், சரியான வழியில் இந்த அனுமதியைப் பெறவதற்காக வேலைகளைச் செய்து வருகிறோம்.

இன்னும் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன இந்த அனுமதியைப் பெறுவதில்.

சொல்லத்தான் நினைக்கிறேன். உள்ளத்தால் துடிக்கிறேன். வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன். இப்போதைக்கு இதைத்தான் என்னால் சொல்ல முடியும்" என்று பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.

``கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' - பாமக ம.க.ஸ்டாலின்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்... மேலும் பார்க்க

"சங்கர் ஆணவக்கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கல" - திமுக அரசுக்கு எதிராகச் சீறும் கௌசல்யா

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா இன்று (09.12.25) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிர... மேலும் பார்க்க

அதிமுக-வில் மீண்டும் இணைந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன்; திமுக மீது குற்றச்சாட்டு; பின்னணி என்ன?

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கெடு விதித்த மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தவெக-வில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபர... மேலும் பார்க்க