செய்திகள் :

சேலம்: ஆண் நண்பருடன் நைட் ஷோ சினிமாவுக்கு சென்ற பட்டதாரி பெண் அடித்து கொலை? - என்ன நடந்தது?

post image

சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்.

பி.இ பட்டதாரியான பாரதி, சங்கர்நகர் பகுதியில் டியூஷன் எடுக்கும் இடத்திலேயே தங்கிக் கொள்வார். இவரது நண்பர் நாலுகால்பட்டி பகுதியை சேர்ந்த உதயசரண், இவர் தனியார் மருத்துவமனையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

பாரதி, உதயசரண்
பாரதி, உதயசரண்

கடந்த 7ம் தேதி நைட் ஷோ சினிமாவிற்கு பாரதியும் உதயசரணும் சென்றிருந்தனர். பின்னர் பாரதி தங்கி இருந்த அறையில் உதயசரண் வந்து தங்கி உள்ளார்.

அப்போது பாரதி மயங்கி நிலையில், உதயசரண் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்து, ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாரதியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன் திரண்டனர். அப்போது அவர்கள் பாரதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாரதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மூக்கில் ரத்தக் காயமும், நெஞ்சுப் பகுதியில் வீக்கமும் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் பலமாக தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

அதே நேரத்தில் உதயசரணிடம் நடத்திய விசாரணையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். உடலில் காயங்கள் இருப்பதால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

பிரேத பரிசோதனை
பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தனர்.

இதற்கிடையில் பாரதிக்கும் உதயசரணுக்கும் இடையில் நெருகிய உறவு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்ததால், பாரதியை அடித்து தலையணையால் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, உதயசரணை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் நடந்த கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடியைச் சேந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், இவரைப் பிரிந்து குழந்தையுடன், திருப்பூரில் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார்.இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, தூ... மேலும் பார்க்க

ஆந்திரா டூ நெல்லை; ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தலில் சிக்கிய மகன்; தந்தை தற்கொலை; நடந்தது என்ன?

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்கிய போதை வஸ்துவான கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீஸாரும் இதனைத் தடுக்க முயன்று வருகின்றனர்.இந்த நிலையில், கடந்த 6-ம் த... மேலும் பார்க்க

நெல்லை: லஞ்சப் புகாரில் சிக்கவைக்க சதி; மேலும் இருவர் கைது- செல்போன் உரையாடலால் சிக்கும் அதிகாரிகள்?

நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், திடீர் சோதனை நடத்தி ரூ.2,42,500-ஐ கைப்பற்றினர். ஆனால், அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில்... மேலும் பார்க்க

மும்பை: காவல் நிலைய வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்; காவலர் கைது!

மும்பை அருகில் போலீஸில் வாக்குமூலம் கொடுக்க வந்த பெண்ணை வாக்குமூலம் வாங்கிய கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் என்ற இடத்தில் இர... மேலும் பார்க்க

'பாகிஸ்தான் ஜெயிலில் மலர்ந்த காதல்?' - எல்லை தாண்ட முயன்ற ஆந்திரா இளைஞர் கைது - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனப்பகுதியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை நகரமான பிகானேரில் உள்ள 17 கே.ஒய்.டி (17 KYD) பகுதிக்கு அருகில் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஓர் இ... மேலும் பார்க்க

ஒரு சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு மற்றொரு சிறுமியுடன் எஸ்கேப் - கேரள வாலிபரை தூக்கிய குமரி போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக படிப்பை கைவிட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த நவம்பர்... மேலும் பார்க்க