செய்திகள் :

உத்தரப்பிரதேசம்: கொலையில் முடிந்த வாக்குவாதம்; வியாபாரியின் தலையை வெட்டி எடுத்த நபர் கைது

post image

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி அருகில் உள்ள பார்சவால் என்ற கிராமத்திற்கு பப்லு என்பவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்ய சென்றார். அங்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்யக்கூடாது என்று சங்கர்(50) என்பவர் தெரிவித்தார்.

ஆனால் பப்லு அங்கிருந்து செல்ல முடியாது என்று தெரிவித்தார். இதனால் பப்லுவிற்கும் சங்கர் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் பப்லுவை கத்தியால் தாக்கி அவரது கழுத்தை சங்கர் அறுத்தார்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தில் பப்லுவின் கழுத்தை அறுத்து எடுத்ததோடு அந்தக் கழுத்தைத் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச்சென்றுவிட்டார். அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பயத்தில் இச்சண்டையில் தலையிடாமல் ஒதுங்கி நின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அக்கிராமத்தில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கொலை
கொலை

பப்லுவின் வீட்டிற்கு போலீஸார் சென்றபோது அங்கு பப்லு எந்தக் கவலையும் இல்லாமல் சமையல் செய்து கொண்டிருந்தார். அவரது அருகில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இருந்தது.

அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து பப்லுவைக் கைது செய்தனர். பப்லுவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பப்லுவிற்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கணவன் கொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டு அவரது மனைவி கதறி அழுதார்.

தகாத ஆசைக்கு இணங்கமறுத்த பணிப்பெண்; குத்திக் கொலைசெய்துவிட்டு ஆந்திராவிற்கு ஓடிய மும்பை டிவி நடிகர்!

மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசிஷ் மேஸ்ரம். டிவி நடிகரான ஆசிஷ் வீட்டில் சுமன் காம்ப்ளே என்ற 37 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வீட்டில் வேலை செய்தபோது அடிக்கடி ஆசிஷ் பாலியல் த... மேலும் பார்க்க

எரிவாயு பற்றாக்குறை: `கேஸ் இணைப்பை துண்டிப்போம்' என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி... உஷார்!

ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர் பற்றாக... மேலும் பார்க்க

பெங்களூரு: இஸ்லாமிய மாணவனை 'தீவிரவாதி' எனத் திட்டிய பேராசிரியர்; வீடியோவால் வெளிவந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில், வகுப்பு நேரத்தில் இஸ்லாமிய மாணவர் ஒருவரை பேராசிரியர் ஒருவர் ‘தீவிரவாதி’ என்று திட்டி, மத ரீதியான வெறுப்புக்கருத்துக்களை உமிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ... மேலும் பார்க்க

காதலனை கரம்பிடிக்க பாலில் விஷம் கலந்து தந்தையை கொன்ற மகள் - குடும்ப சண்டையில் காட்டிக்கொடுத்த கணவன்

காதலனை கைபிடிக்க, சொந்த தந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தையின் வேலையில் சேர்ந்த மகள் 3 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராப்பூர் என்ற இடத்தை சே... மேலும் பார்க்க

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் குற்றச்சாட்டு - போலீஸ் விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், செல்... மேலும் பார்க்க

`பிள்ளைகளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்துவிட்டு' - மனதை ரணமாக்கும் காஞ்சிபுரம் சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷம்சியா (26). இவருக்கு ஆஷிபா (8), அப்தர் (5) என இரண்டு குழந்தைகள். ஷம்சியாவின் கணவர் ஆசிப் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கடன் தொல்லையால்... மேலும் பார்க்க