செய்திகள் :

'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்...' - முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன?

post image

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. தவெக சார்பில் இரண்டு தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்யே களமிறங்கி பிரசாரம் செய்யவிருக்கிறார். இடைத்தேர்தலும் முதல்வர் விஜய்யின் பிளான் என்னவென்பதை பனையூர் வட்டாரத்தில் விசாரித்தோம்.

TVK Vijay
TVK Vijay

நம்மிடையே பேசிய சீனியர்கள் சிலர், 'மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் அரசின் மீது கொஞ்சம் அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது. மேலும், அதிமுகவிலிருந்து விலகி வந்த எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது கொஞ்சம் நெகட்டிவாக மாறியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளும் இவற்றை கையிலெடுத்து களமாட தொடங்கிவிட்டன. எதிர்பார்க்கும் களம் அத்தனை எளிதாக இருக்காது என உளவுத்துறையும் தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடித்து வெற்றியை உறுதி செய்யும் வகையில் வலுவாக தன்னுடைய பிரசாரத்தை வடிவமைக்க சொல்லி வியூக வகுப்புப் புள்ளியிடம் முதல்வர் கூறியிருக்கிறார். வழக்கம்போல, ஒரே ஒரு நாள் மட்டும் அதாவது தாராபுரத்துக்கு ஒரு நாளும் மதுராந்தகத்துக்கு ஒரு நாளும் முதல்வர் சென்று வந்தாலே போதுமென வியூக வகுப்புக் குழு நினைத்தது. களம் கொஞ்சம் கடினமாக இருக்கும் என ரிப்போர்ட் கிடைத்ததால்தான் முதல்வரின் பிரசாரத்தை தொகுதிக்கு இரண்டு நாட்கள் என மாற்றியிருக்கிறார்கள் . அதன்படி செப்டம்பர் 25, அக்டோபர் 2 ஆம் தேதிகளில் மதுராந்தகத்தில் முதல்வர் பிரசாரம் செய்யவிருக்கிறார்.

Vijay TVK - விஜய் - த.வெ.க

முதல்வரின் மற்ற அலுவல் பணிகளை பொறுத்து தாராபுரத்துக்கும் 2 நாட்கள் பிரசாரம் திட்டமிடப்படும். பொதுக்கூட்டம் + ரோடு ஷோ என முதல்வரின் பிரசாரம் திட்டமிடப்பட்டிருக்கிறது. பொதுக்கூட்டத்தில் மே 4 முதல் மே 10 வரை அந்த 7 நாட்களில் திரைமறைவில் நடந்த சம்பவங்களை ஹைலைட் செய்து பேசி அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு ஏன் சீட் கொடுத்தோம் என்று மக்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். கூடவே திமுகவினர் மீதான புகார்களையும் கையிலெடுத்து திமுக எதிர்ப்பை இன்னும் கூர்மையாக்கும் வகையில் பேசுவார். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை எடுத்துக் கொண்டு இரண்டாவது ரவுண்டு தொகுதிக்குள் செல்லும்போது அந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் முதல்வரின் பேச்சை வடிவமைக்கும் திட்டமும் இருக்கிறது. தொகுதிக்குள் சென்று தான் செய்யப்போகும் ரோடு ஷோவும் பொதுக்கூட்டமுமே வெற்றியை தேடித் தந்துவிடுமென முதல்வர் நம்பிக்கையோடு இருக்கிறார்' என்றனர்.

“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” - உதயநிதி

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்."தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் க... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் தேர்தல்; காங்கிரஸுக்கு மம்தா ஆதரவு - வேட்பாளர் திடீர் கைது!

மேற்கு வங்கத்தின் தற்போதைய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பவானிபூர், நந்திகிராம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே வெற்றி பெற்றார்.இதில் பவானிபூர் தொகுதி என்பது மேற்கு வங்கத்தின் முன்னாள்... மேலும் பார்க்க

”அது AI போட்டோ; போலி புகார்; என் மீதான நடவடிக்கையை ஏற்க முடியாது" - கருப்பு முருகானந்தம்!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். டெல்டா பா.ஜ.க-வின் முகமாக இருந்தவர். டெல்டாவில் கட்சிய... மேலும் பார்க்க

"16 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு; நிர்வாக சீர்கேட்டின் உச்சம் இது.!"- சீமான் கண்டனம்

"16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம்" என்று நாம் தமிழர் கட... மேலும் பார்க்க

பள்ளி மாணவன் இறப்பு விவகாரம்: மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; தள்ளுமுள்ளு... பரபரப்பு!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்தவர் 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த வாரம் முட்புதர் குட்டை ஒன்றில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்த... மேலும் பார்க்க

"யாரும் என்னை மிரட்ட முடியாது; பண்ணையார் அரசியல் எல்லாம்..!"- கே.என் நேருவுக்கு துரை வைகோ பதில்

மதிமுக எம்.பி துரை வைகோ செப்.15 செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “திமுக என்ன மன்னர் கட்சியா? அவர்கள் கொடுக்கும் பிச்சையை பெற்றுத்தான் எம்.பி. ஆக வேண்டுமா? எனது எம்.பி பதவி அப்படியே திமுக பிச்சை போட்டதாக... மேலும் பார்க்க