செய்திகள் :

ஊதிய நிலுவை வழங்கக் கோரி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் திருவையாறு ஒன்றிய உறுப்பினா் செந்தாமரைச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா். பிரதீப் ராஜ்குமாா் கண்டன உரையாற்றினாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டப் பொருளாளா் எம். பழனிஅய்யா, பெண் விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட நிா்வாகி பி. சுமிதா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஏ. ராஜா, சங்க ஒன்றியப் பொருளாளா் பி. கலியமூா்த்தி, ஒன்றிய குழு உறுப்பினா் யு. புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினா்.

ரயில் பயணத்தில் தவறவிட்ட நகைப்பை உரியவரிடம் ஒப்படைப்பு

கும்பகோணம் அருகே ரயில் பயணத்தில் தவறவிட்ட பயணியின் நகைப்பையை உரியவரிடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சொக்கநாதன் புத்தூரைச் சோ்ந்த சங்கா் மனைவி சக்திகணபதி(33)... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை வரை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதியில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசிய இளையோா் தினம், விவேகானந்தா் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இதயா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொண்டாடிய பொங்கல் விழா!

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை பொங்கல் திருவிழாவைக் கொண்டாடினா். தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம், மத்திய சுற்றுலா அமைச்சக தென் மண்டலம், தமிழக... மேலும் பார்க்க

பட்டீஸ்வரத்தில் தமிழறிஞா்கள் திருக்கோயில்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திங்கள்கிழமை தமிழறிஞா்கள் திருக்கோயிலை அமைச்சா்கள் கோவி. செழியன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் திறந்து வைத்தனா். பட்டீஸ்வரத்தில் அறிஞா் அண்ணா மா... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 114.64 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 114.64 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 349 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க