செய்திகள் :

``எங்கள் காதல் சாகவில்லை'' - இறந்த காதலனை திருமணம் செய்வதாக அறிவித்த பெண்

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள ஜுனா கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அச்சல் (20). இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அவரது சகோதரனின் நண்பன் சக்‌ஷாம் அடிக்கடி வந்து செல்வதுண்டு. இவ்வாறு வந்து சென்றபோதுதான் அச்சலுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்க ஆரம்பித்தனர். இந்தக் காதல் அச்சல் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அச்சலும், அவரது காதலனும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு அச்சல் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதலனுடன் அச்சல்
காதலனுடன் அச்சல்

அச்சல் தனது காதலனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இந்நிலையில், சக்‌ஷாம் தனது காதலி வீட்டிற்கு அருகில் நடமாடுவதாக அச்சலின் தந்தைக்கு தகவல் கிடைத்தது.

உடனே அச்சலின் தந்தை கஜானன் தனது மகன்கள் சாஹில் மற்றும் ஹிமேஷ் ஆகியோருடன், சில உறவினர்களையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அவர்கள் சக்‌ஷாமை பார்த்தவுடன் அடித்தும் உதைத்தும் தாக்கினர். பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். அதற்குப் பிறகு பெரிய கல்லை எடுத்து சக்‌ஷாம் தலையில் போட்டுக் கொலை செய்தனர்.

சக்‌ஷாமின் உடலை அவரது வீட்டில் பெற்றோர் இறுதிச்சடங்கிற்காகத் தயார் செய்து கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அச்சல் திடீரென அங்கு வந்தார். அவர் தனது காதலன் உடல் முன்பு மஞ்சளை எடுத்து பூசிக் கொண்டார். அதோடு குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டார்.

அச்சல்
அச்சல்

இறந்த காதலனைத் திருமணம் செய்யப் போவதாக தெரிவித்தார். “என் காதலன் இறந்துவிட்டாலும் எங்களது காதல் இன்னும் சாகவில்லை; எனவே நான் அவரைத் திருமணம் செய்கிறேன்” என்று கூறினார். இதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மேலும், இறந்த காதலனை திருமணம் செய்து கொண்ட அச்சல், “இனி இதுதான் எனது வீடு. வாழ்நாள் முழுவதும் இங்குதான் இருப்பேன். என் பெற்றோர் வீட்டிற்கு செல்ல மாட்டேன். என் காதலன் இறந்த பிறகே எங்கள் காதல் வெற்றி பெற்றது; ஆனால் என் தந்தையும் சகோதரர்களும் தோற்றுவிட்டனர்” என்று கூறினார். அதோடு தனது காதலனை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

போலீஸார் இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்துள்ளனர்.

மின்சாரம் பாய்ந்த பாம்பு; CPR கொடுத்து உயிரைக் காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ

குஜராத் மாநிலத்தின் வல்சாத் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்த பாம்பு ஒன்றுக்கு CPR செய்து உயிரைக் காப்பாற்றிய வனவிலங்கு மீட்பு நிபுணரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்கம்பியில்... மேலும் பார்க்க

AI Video: 90 வயது தாத்தாவுக்கு பேரன் கொடுத்த AI Gift; கண்கலங்கிய குடும்பம்; வைரலான வீடியோ!

90வது வயதை எட்டியுள்ள தனது தாத்தாவுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது பேரன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.தொழில்நுட்ப உலகில் 'செயற்கை நுண்ணறிவு' பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி... மேலும் பார்க்க

நாகாலாந்து: 'வெட்டுக்கிளி, பட்டுப்புழு, பூனை' - திகைத்த சுற்றுலாப் பயணி; வைரலான உணவுப் பட்டியல்

நாகாலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் வருடாந்திர ஹார்ன்பில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழா இப்போது தொடங்கி நடந்து வருகிறது. விழாவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்க... மேலும் பார்க்க

IndiGo: ஒரே நாளில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி; காரணம் என்ன?

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.நவம்பர் மாதத்தில் மட்டும் மொத... மேலும் பார்க்க

"சில்க் ஸ்மிதா பேருல மக்களுக்காக உதவுறேன், ஏன்னா.!" - நெகிழும் டீக்கடை குமார்!

ஈரோடு அகில்மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் குமார்.மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், கடந்த 20 வருடங்களாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் நேற்று ... மேலும் பார்க்க

Alpha Beard: தாடிக்குள்ளே 26 ஆங்கில எழுத்துக்கள்; பிரிட்டன் கலைஞரின் வைரல் வீடியோ!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது தாடி மற்றும் மீசையை ஆங்கில அகரவரிசையின் 26 எழுத்துக்களாக மாற்றி இணையத்தில் வைரலாக்கியுள்ளார்.'A' முதல் 'Z' வரையிலான அனைத்து எழுத்துக்களையும் தனது முகத்தில் உள்ள முடிக... மேலும் பார்க்க