செய்திகள் :

``எங்கள் காதல் சாகவில்லை'' - இறந்த காதலனை திருமணம் செய்வதாக அறிவித்த பெண்

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள ஜுனா கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அச்சல் (20). இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அவரது சகோதரனின் நண்பன் சக்‌ஷாம் அடிக்கடி வந்து செல்வதுண்டு. இவ்வாறு வந்து சென்றபோதுதான் அச்சலுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்க ஆரம்பித்தனர். இந்தக் காதல் அச்சல் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அச்சலும், அவரது காதலனும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு அச்சல் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதலனுடன் அச்சல்
காதலனுடன் அச்சல்

அச்சல் தனது காதலனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இந்நிலையில், சக்‌ஷாம் தனது காதலி வீட்டிற்கு அருகில் நடமாடுவதாக அச்சலின் தந்தைக்கு தகவல் கிடைத்தது.

உடனே அச்சலின் தந்தை கஜானன் தனது மகன்கள் சாஹில் மற்றும் ஹிமேஷ் ஆகியோருடன், சில உறவினர்களையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அவர்கள் சக்‌ஷாமை பார்த்தவுடன் அடித்தும் உதைத்தும் தாக்கினர். பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். அதற்குப் பிறகு பெரிய கல்லை எடுத்து சக்‌ஷாம் தலையில் போட்டுக் கொலை செய்தனர்.

சக்‌ஷாமின் உடலை அவரது வீட்டில் பெற்றோர் இறுதிச்சடங்கிற்காகத் தயார் செய்து கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அச்சல் திடீரென அங்கு வந்தார். அவர் தனது காதலன் உடல் முன்பு மஞ்சளை எடுத்து பூசிக் கொண்டார். அதோடு குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டார்.

அச்சல்
அச்சல்

இறந்த காதலனைத் திருமணம் செய்யப் போவதாக தெரிவித்தார். “என் காதலன் இறந்துவிட்டாலும் எங்களது காதல் இன்னும் சாகவில்லை; எனவே நான் அவரைத் திருமணம் செய்கிறேன்” என்று கூறினார். இதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மேலும், இறந்த காதலனை திருமணம் செய்து கொண்ட அச்சல், “இனி இதுதான் எனது வீடு. வாழ்நாள் முழுவதும் இங்குதான் இருப்பேன். என் பெற்றோர் வீட்டிற்கு செல்ல மாட்டேன். என் காதலன் இறந்த பிறகே எங்கள் காதல் வெற்றி பெற்றது; ஆனால் என் தந்தையும் சகோதரர்களும் தோற்றுவிட்டனர்” என்று கூறினார். அதோடு தனது காதலனை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

போலீஸார் இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்துள்ளனர்.

ஆஸ்திரேலியா: 62 வயதில் காதலியை மணந்த அந்தோணி; பதவிக்காலத்தில் திருமணம் செய்த முதல் பிரதமராகிறார்!

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தனது நீண்ட நாள் காதலியான ஹெய்டனை நவம்பர் 29, 2025 அன்று கரம்பிடித்தார்.62 வயதில் திருமணம் செய்துகொண்ட அல்பானீஸ், ஆஸ்திரேலிய வரலாற்றில் பதவியில் இருக்கும் காலத்த... மேலும் பார்க்க

``கணவன் கோபமாக இருந்தால் எதுவும் சொல்லாதீர்கள்''- வைரலாகும் தோனியின் அறிவுரை

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் சமீபத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். இத்திருமணத்தில் மகேந்திர சிங் தோனி பேசுகையில் நகைச்சுவையாக பேசினார். அவர் மணமக்களுக்கு வழங்கிய அ... மேலும் பார்க்க

NMMK: மங்களதேவி கண்ணகி கோயில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ( NMMK) சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மங்களதேவி கண்ணகி கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்... மேலும் பார்க்க

சிறுத்தையை பிடிக்க வைத்திருந்த கூண்டு; குடிபோதையில் நுழைந்த வாலிபர் - கதவு மூடிக்கொண்டதால் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள உம்ரி தெஹாலோ என்ற கிராமத்தில் சிறுத்தைகள் அடிக்கடி பொதுமக்கள் குடியிருப்புக்குள் புகுந்து மக்களை தாக்க ஆரம்பித்தது. ஒரு பெண்ணை சிறுத்தை அடித்து கொன்று இ... மேலும் பார்க்க

`உங்கள் தந்தையின் உழைப்பு எனக்கு வேண்டாம்’ - பெண் வீட்டார் கொடுத்த ரூ.31 லட்சத்தை நிராகரித்த மணமகன்

திருமணம் என்றாலே வரதட்சணைதான் பெரும்பாலும் முதலில் பேசப்படும். அந்த வரதட்சணையால் எத்தனையோ திருமணங்கள் நின்று இருக்கிறது. எத்தனையோ பெண்கள் வாழ முடியாமல் பெற்றோர் வீட்டில் வந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற... மேலும் பார்க்க

தர்மேந்திராவுக்கு இரங்கல் கூட்டம்: ஒட்டுமொத்த பாலிவுட் பங்கேற்பு; தவிர்த்த மனைவி ஹேமாமாலினி, மகள்கள்

கடந்த வாரம் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவிற்காக அவரது குடும்பத்தினர் மும்பையில் பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். முதல் மனைவியின் குடும்பத்தினர் இந்த கூட்டத்தை ஏற... மேலும் பார்க்க