செய்திகள் :

``எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினோமா? 'இவர்கள்' பறைசாற்றுவார்கள்" - மகளிர் மாநாட்டில் கனிமொழி

post image

திருப்பூர், காரணப்பேட்டையில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் மக்களவை எம்.பி கனிமொழி பேசியதாவது...

"இந்த மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய அரசியலமைப்பு சாசனத்தைப் பரிசளித்தோம்.

காரணம், இந்த மேடையில் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டை அல்ல... இந்த நாட்டை ஒப்படைத்திருக்கிறோம்.

கனிமொழி
கனிமொழி

நம்முடைய அரசியலமைப்பு சட்டம் தரக்கூடிய செய்தி - நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம். இதை காப்பாற்றக்கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். இந்த நம்பிக்கையை நான் மட்டும் அல்ல... இந்த நாடே வைத்திருக்கிறது. அதனால்தான், இதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று இந்தப் பரிசைக் கொடுத்திருக்கோம்.

பாசிசத்திற்கு எதிராக எழும் குரல் எல்லாம் உங்களுக்கு பின்னால் எழும் குரல்களாக இருந்து வருகின்றது. அதனால்தான், இந்த நாடு உங்களை நம்பியிருக்கிறது என்று நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 1.30 கோடி சகோதரிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

'தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தீர்களே... நிறைவேற்றுனீர்களா?' என்று நம்மை பார்த்து சிலர் கேட்கிறார்கள். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை இந்த 1.30 கோடி சகோதரிகள் பறைசாற்றுவார்கள்.

அடுத்தது, கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம். வேலைக்கு 47 சதவிகிதம் செல்லக்கூடிய பெண்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

கனிமொழி
கனிமொழி

இந்தியாவில் பெண்கள் உயர் கல்விக்குச் செல்லும் சதவிகிதம் 28. ஆனால், தமிழ்நாட்டின் சதவிகிதம் 48.

கிராம மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை சம்பளத்தை, பொருளாதார பாதுகாப்பைத் தரும் 100 நாள் திட்டத்தைப் பாதிக்கும் வகையில் பாஜக நடந்து வருகிறது. இதற்கு எதிராக தமிழ்நாட்டில் யாரும் பேசவில்லை.

மதக் கலவரம், காழ்ப்புணர்ச்சியைத் தூண்டி வெற்றி பெறலாம் என்று நினைக்கும் பாஜக-விற்கு சம்மட்டி அடியாக நிற்கிறார், நமது முதலமைச்சர் ஸ்டாலின்."

"பாஜகவின் 'இந்த' செயல் 'Operation Success Patient Dead' நிலைமை" - ஸ்டாலின் பேச்சு

இன்று திருப்பூரில் ’வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு பேசியதாவது, "கருப்பு சிவப்பு உடைகளில் இவ்வளவு பெண்கள... மேலும் பார்க்க

`தேர்தலுக்குப் பிறகு அன்புமணி ஜீரோவுக்குப் போவார்' - பாமக அருள் பேச்சு

சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இணைச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான அருள் உரையாற்றினார். அப்போது அவர், ``எப்படி இருக்க வேண்டும் என்பதற்... மேலும் பார்க்க

`பதவி வெறி கண்ணை மறைத்தால்... தகப்பன்கூட எதிரியாகத்தான் தெரிவார்!' - அன்புமணியைச் சாடும் சகோதரி மகன்

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தியின் மகனும், மாநில செயற்குழு உறுப்பினருமான சுகந்தன் பேசுகையில், "எனக்கு தமிழி... மேலும் பார்க்க

DMDK: திமுக, அதிமுக, தவெக... யாருடன் கூட்டணி? தேமுதிகவின் திட்டம் தான் என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2026) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் த... மேலும் பார்க்க

`சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு, அவமானப்படுத்துகிறார்..!" - அன்புமணி குறித்து மனம் நொந்த ராமதாஸ்

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியது, "எனக்கு இருக்கிற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்... மேலும் பார்க்க

பல்லடம்: 1.5 லட்சம் பெண்கள்... கறுப்பு, சிவப்பு டிரெஸ் கோடு; செ.பா-வின் மகளிர் மாநாடு ஏற்பாடுகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் கடந்த காலங்களில் தோல்வியைச் சந்தித்ததால், இந்த முறை திமுக அந்தப் பகுதியில் வெற்றி பெற அதிக கவனம் ச... மேலும் பார்க்க