செய்திகள் :

``எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினோமா? 'இவர்கள்' பறைசாற்றுவார்கள்" - மகளிர் மாநாட்டில் கனிமொழி

post image

திருப்பூர், காரணப்பேட்டையில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் மக்களவை எம்.பி கனிமொழி பேசியதாவது...

"இந்த மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய அரசியலமைப்பு சாசனத்தைப் பரிசளித்தோம்.

காரணம், இந்த மேடையில் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டை அல்ல... இந்த நாட்டை ஒப்படைத்திருக்கிறோம்.

கனிமொழி
கனிமொழி

நம்முடைய அரசியலமைப்பு சட்டம் தரக்கூடிய செய்தி - நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம். இதை காப்பாற்றக்கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். இந்த நம்பிக்கையை நான் மட்டும் அல்ல... இந்த நாடே வைத்திருக்கிறது. அதனால்தான், இதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று இந்தப் பரிசைக் கொடுத்திருக்கோம்.

பாசிசத்திற்கு எதிராக எழும் குரல் எல்லாம் உங்களுக்கு பின்னால் எழும் குரல்களாக இருந்து வருகின்றது. அதனால்தான், இந்த நாடு உங்களை நம்பியிருக்கிறது என்று நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 1.30 கோடி சகோதரிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

'தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தீர்களே... நிறைவேற்றுனீர்களா?' என்று நம்மை பார்த்து சிலர் கேட்கிறார்கள். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை இந்த 1.30 கோடி சகோதரிகள் பறைசாற்றுவார்கள்.

அடுத்தது, கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம். வேலைக்கு 47 சதவிகிதம் செல்லக்கூடிய பெண்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

கனிமொழி
கனிமொழி

இந்தியாவில் பெண்கள் உயர் கல்விக்குச் செல்லும் சதவிகிதம் 28. ஆனால், தமிழ்நாட்டின் சதவிகிதம் 48.

கிராம மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை சம்பளத்தை, பொருளாதார பாதுகாப்பைத் தரும் 100 நாள் திட்டத்தைப் பாதிக்கும் வகையில் பாஜக நடந்து வருகிறது. இதற்கு எதிராக தமிழ்நாட்டில் யாரும் பேசவில்லை.

மதக் கலவரம், காழ்ப்புணர்ச்சியைத் தூண்டி வெற்றி பெறலாம் என்று நினைக்கும் பாஜக-விற்கு சம்மட்டி அடியாக நிற்கிறார், நமது முதலமைச்சர் ஸ்டாலின்."

`ஆரம்பிக்கலாங்களா..!' - கோவையில் வேலுமணி கேம் ஸ்டார்ட் - செந்தில் பாலாஜி ஷாக்!

தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். கோவை மாவட்டம் அதிமுகவின் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தமுறை அங்கு வெற்றி பெறுவதற்கு திமுக தீவிரமா... மேலும் பார்க்க

"அவருக்கு கோபம், மனக்கசப்புகள் இருந்தாலும்கூட..!"- டிடிவி NDA கூட்டணியில் இணைந்தது குறித்து அண்ணாமலை

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (ஜன.22) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்."அண்ணன் டி.டி.வி.தினகரன் என்னிடம் முதலில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் மனநிலை என்... மேலும் பார்க்க

`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்!

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ர... மேலும் பார்க்க

`அப்செட் வைத்தி; இதை கொஞ்சமும் எதிர்பார்க்கல' - எடப்பாடியுடன் இணையும் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழக்கத்தில் இருந்த வைத்திலிங்கம், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன் நேராக அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி... மேலும் பார்க்க

"ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவாயானு கேட்டார்; அதனால்" - அரசியலிலிருந்து விலகும் குன்னம் ராமச்சந்திரன்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள்உறுப்பினரும், ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் செயலாளருமாகச் செயல்பட்டு வந்தார் ஆர்.டி.ராமச்சந்தி... மேலும் பார்க்க