செய்திகள் :

எஸ்.பி.வேலுமணியை ’துரோகி' என்ற அதிமுக தொண்டர் – பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் பரபரப்பு!

post image

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள், கடந்த மே 16ம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் உள்ள பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், கந்தசாமி உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தனர். இதனிடையே எஸ்.பி.வேலுமணி வந்த போது, கூட்டத்தில் இருந்த அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் ‘துரோகிங்க அண்ணா இவனுக எல்லாம்’ என குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எஸ்.பி.வேலுமணியின் முகம் மாறிய நிலையில், டென்ஷனான பொள்ளாச்சி ஜெயராமன் இதுபோல பேசக் கூடாது என கடிந்து கொண்டார். குரல் எழுப்பிய தொண்டரை கட்சியினர் அங்கிருந்து வெளியேற்றினர். இதன் காரணமாக பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

`விஜய் Bro... உங்களை இயலாதவர் என்று சொல்வதில் என்ன தவறு?'- முதல்வரின் விமர்சனங்களுக்கு ஆ.ராசா பதில்!

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் தேர்தலை எதிர்க்கொண்டு வெற்றிப்பெற்றார். அதைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கான எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.இந்த நிலை... மேலும் பார்க்க

போலி கையொப்ப சிக்கல்; அதிகரிக்கும் அதிருப்தி... பிளவை நோக்கிச் செல்கிறதா மம்தா கட்சி?!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இத்தோல்வியால் கட்சி கலகலத்துப்போய் இருக்கிறது. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களில் பெரும்பான்மையினர் திரிணா... மேலும் பார்க்க

"தேர்தல் பிரச்சார MOOD-ல் இருந்து அவர் வெளிய வரல.!”- முதல்வர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் இன்று (ஜூன்.2) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திருச்சிக்குச் சென்றிருந்தார். அவர்... மேலும் பார்க்க

பட்டியல் சமூகத்துக்கு மீண்டும் வாய்ப்பு? - தவெக சார்பில் ராஜ்யசபா செல்லப்போவது யார்?

தமிழகத்தில் காலியாக உள்ள 1 மாநிலங்களவை எம்.பி இடத்துக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. ஜூன் 8 ஆம் தேதி வரைக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசமிருக்கிறது. எம்.எல்.ஏக்களின் எ... மேலும் பார்க்க

``நன்றியுணர்வு கேள்வி... RSS திட்டப்படி ஆட்சிக்கு வர சதி" - வைகோவுக்கு மாணிக்கம் தாக்கூர் பதில்!

தி.மு.க கூட்டணியில், உதய சூரியன் சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட ம.தி.மு.க 4 இடங்களில் போட்டியிட்டது. அதில் 2 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்கு பாதகமாக வந்த நிலையில், ... மேலும் பார்க்க

`அணி மாறுவதில் வைகோ 8 அடி பாய்ஞ்சா துரை 16 அடி பாய்வார்னு நிரூபிக்கிறார், அவ்வளவுதான்'- மல்லை சத்யா

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று பேசியது, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை கிளப்... மேலும் பார்க்க