செய்திகள் :

`ஏமாற்றிய மனைவியை கொன்றுவிட்டேன்' - சகோதரியை கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்த வங்கி ஊழியர்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வருபவர் மனஸ் பாஜ்பாய். இவரது மனைவி திவ்யா மிஸ்ரா. இவரும் தனியார் வங்கி ஒன்றில் மக்கள் தொடர்பு மேலாளராக இருக்கிறார்.

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்கின்றனர். திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பாஜ்பாய் சந்தேகப்பட்டார். எனவே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். திவ்யா தனக்கு விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

இதனிடையே பாஜ்பாய் மதியம் தனது மனைவி வேலை செய்யும் தனியார் வங்கி கிளையை சென்றார்.

வங்கிக்கு வெளியில் வாக்குவாதம்

அங்கு அவர் தனது மனைவி திவ்யாவை வங்கியில் இருந்து வெளியில் வரும்படி கேட்டுக்கொண்டார். வங்கிக்கு வெளியில் வந்த திவ்யாவுடன் பாஜ்பாய் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தார். அந்நேரம் திவ்யா வங்கிக்குள் செல்ல முயன்றார். ஆனால் அவரை தடுத்து நிறுத்தி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டார்.

கண்காணிப்பு கேமரா பதிவு

உடனே வங்கியில் இருந்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்து திவ்யாவை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் திவ்யா அதற்குள் இறந்துபோனார்.

இருவரும் வங்கிக்கு வெளியில் வாக்குவாதம் செய்தது மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்றவை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. பாஜ்பாய் பின்னர் வங்கியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார், அங்கு அவர் தனது சகோதரி ஷீபா (31) என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அடுத்த சில நிமிடங்களில் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

`என் மனைவியை கொன்றுவிட்டேன்'

முதல் கொலை நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு பாஜ்பாய் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேடஸில், “இன்று என் மனைவி என்னை ஏமாற்றியதால் நான் கொன்றேன், இப்போது நான் என்னையும் என் சகோதரியையும் கொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கொலை, மரணங்கள் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை: 4 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - மதபோதகருக்கு மரண தண்டனை!

நெல்லை மாவட்டம் மேலஇலந்தக்குளத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம். கிறிஸ்துவ மத போதகர். 47 வயதான இவர் தேவர்குளம் காவல் எல்லைக்கு உள்பட்ட மேல இலந்தைக்குளம் பகுதியில் சபை நடத்தி மதபோதகம் செய்து வந்துள்ளார். இந்த ... மேலும் பார்க்க

`கணவரை குணப்படுத்துவார் என நினைத்தேன்' - திருநங்கை வேடத்தில் வந்து விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை

மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த கட்டடத்திற்கு திருநங்கை வேடத்தில் ஒருவர் வந்தார். அந்த நபர் விடுதியின் வெளியில் நின்று கொண்டிருந்த ... மேலும் பார்க்க

கொடநாடு வழக்கு: 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சந்தோஷ் சாமி உயிரிழப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான டீ எஸ்டேட் மற்றும் பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட கொடநாடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2017... மேலும் பார்க்க

சென்னை: மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்; போலீஸ் தீவிர விசாரணை

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நவீன் (41). இவரின் மகள் க்ஷிபிஜா (13). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வக... மேலும் பார்க்க

மதுரை: ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பள்ளி மாணவிகள் புகார் - 4 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2025-26ல் பயின்ற +2 மாணவிகளுக்கு நேரடியாகவும், போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாக இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் என்பவர் மீது மாணவ... மேலும் பார்க்க

சென்னை: வியாபாரியிடம் பைக்கை திருடிய போலி போலீஸ் - சிக்கியது எப்படி?

சென்னை, கோயம்பேடு, பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் சங்கர் (53). இவர், கோயம்பேடு, 100அடி சாலையில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். 31.07.2026-ம் தேதி மாலை, கோயம்பேடு மார்க்கெட் செல்ல சங்கர், தன்ன... மேலும் பார்க்க