செய்திகள் :

ஏற்கெனவே 2 மனைவிகள், 5 குழந்தைகள் - பள்ளி மாணவியுடன் 3-வது திருமணத்துக்கு முயன்ற லாரி ஓட்டுநர் கைது!

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த மே மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரின் பெற்றோர், காட்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். அதன்பேரில், போலீஸாரும் மாயமான மாணவியைத் தேடத் தொடங்கினர்.

இந்த நிலையில், மாணவிக்கும், காட்பாடி அருகேயுள்ள வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரகாஷ் (31) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, அவரைத் தேடியபோது ஆந்திராவில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரகாஷை பிடித்த போலீஸார், அவரின் கட்டுப்பாட்டில் இருந்த மாணவியையும் மீட்டனர்.

கைது

தொடர்ந்து, போக்சோ பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தியதில், பள்ளிக்குச் சென்று திரும்பும்போது சிறுமியிடம் பேசி பழகி காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார் பிரகாஷ். ஆனால், பிரகாஷுக்கு ஏற்கெனவே 2 முறை திருமணமாகி, முதல் மனைவிக்கு 3 குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு 2 குழந்தைகளும் இருப்பது மாணவிக்குத் தெரியவில்லை.

பிரகாஷ் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதை நம்பி மாணவி அவருடன் சென்றுள்ளார். மாணவியை ஆந்திராவுக்குக் கடத்திச் சென்ற பிரகாஷ் செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு மாணவியுடன் குடும்பம் நடத்திவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு பிரகாஷை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்த போலீஸார், மீட்கப்பட்ட மாணவியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கூட்டுக் குடும்பத்தில் மோதல்; அதிக சத்தத்துடன் மியூசிக்; சகோதரர்கள் சண்டையில் தந்தை, மகன் கொலை

மும்பை விக்ரோலியில் வசித்து வந்தவர் சுனில் விஷ்வகர்மா(40). இவர் ஒரே வீட்டில் தனது குடும்பம் மற்றும் மேலும் 3 சகோதரர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தார். இரவில் அதிக சத்தத்துடன் சுனில் பாட்டு கேட்டுள்ளார... மேலும் பார்க்க

தனியாக வசித்த மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருட்டு - காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த கொடூரம்!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சாம்பார் என்ற இடத்தில் கம்லா தேவி (65) என்ற பெண் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த ந... மேலும் பார்க்க

கேரள சிவசேனா செயலாளர் கொலை வழக்கு; குமரியில் இருவர் கைது; 3 பேரை தேடும் போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணகோடு பகுதி அருகே இறந்த நிலையில் ஒருவரின் உடல் மிதப்பதாக பொதுமக்கள் கடந்த 31-ம் தேதி மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு... மேலும் பார்க்க

தருமபுரி : அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிப்பு! - தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தருமபுரிதருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தொ.காணிகரஅ... மேலும் பார்க்க

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை - கோவை போலீஸ் கைது!

திருப்பூரை சேர்ந்தவர் மணிவேந்தன்(32). காவலரான இவர், கோவை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட போத்தனூர் விசாரணைப் பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளார். அவர் வேலை விஷயமாக ஆகஸ்ட் 5ம் தேதி காலை பொள்ளாச... மேலும் பார்க்க

கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்த இளம்பெண்; சூட்கேசில் பிணமாக மீட்பு - போலீஸ் விசாரணை!

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோடிகுமாரி. இப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஊரைச் சேர்ந்த ரிஷப்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.... மேலும் பார்க்க