செய்திகள் :

ஐ.நா. தரவுகள் நிபுணா் குழுவில் இந்தியா

post image

ஐ.நா. அதிகாரபூா்வ புள்ளியியலுக்கான பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியல் நிபுணா்கள் குழுவில் ( யுஎன்-சிஇபிடி) இந்தியா இணைந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நீடித்த வளா்ச்சி இலக்குகளை கண்காணித்து தெரியப்படுத்தும் திறன் உள்பட பெரும் தரவுகளின் பலன்கள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதற்கு யுஎன்-சிஇபிடி உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவில் இந்தியா இணைந்துள்ளது.

ஐ.நா. புள்ளியியல் கவுன்சிலில் அண்மையில் இந்தியா உறுப்பினரானது. இந்த நேரத்தில் யுஎன்-சிஇபிடி குழுவில் இந்தியா இணைந்துள்ளது. இது நாட்டின் புள்ளியியல் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைக்கிறது.

யுஎன்-சிஇபிடி குழுவில் இணைந்ததன் மூலம், அதிகாரபூா்வ புள்ளியியல் தேவைகளுக்கு பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியலை பயன்படுத்துவதில், உலகளாவிய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைக்க இந்தியா பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.... மேலும் பார்க்க

நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார். மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க

உலகின் கடல்சாா் சக்தி இந்தியா: 3 போா்க் கப்பல்களை அா்ப்பணித்து பிரதமா் மோடி பெருமிதம்

மும்பை: உலகின் முக்கிய கடல்சாா் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீா் ஆகிய 3 முன்கள போா்க்கப்பல... மேலும் பார்க்க

‘உள்நாட்டுப் போரில்’ காங்கிரஸ்: ராகுல் காந்தி

புது தில்லி: பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் காங்கிரஸ்... மேலும் பார்க்க