செய்திகள் :

80-ல் நுழைந்த‌ ப.சிதம்பரம், நளினி சிதம்பரம்; கார்த்தி சிதம்பரம் தந்த ஸ்பெஷல் பரிசு!

post image

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் இருவரும் 80 வயதை தொட்டிருப்பதையடுத்து, அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இன்று சென்னையில் மதிய விருந்தளிக்கப் பட்டது.

ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் இருவருக்குமே தற்போது 79 முடிந்து 80 வது வயது தொடங்குகிறது.

இதையொட்டி இவர்களது மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் இதை செலிபிரேட் செய்யும்விதமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகள் சிலருக்கு மதிய விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

சென்னை கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இன்று மதியம் நிகழ்ந்த இந்த விருந்து விழாவுக்கு ப.சியின் குடும்பத்தினர், அவரது சகோதரி குடும்பம் மற்றும் நெருங்கிய செட்டி நாட்டுச் சொந்தங்கள் கலந்து கொண்டனர்.

தவிர நடிகர்கள் சிவக்குமார், கவிஞர வைரமுத்து, வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன், நல்லி குப்புசாமி உள்ளிட்ட பிரபலங்களும் வருகை தந்த‌னர்.

கார்த்தி சிதம்பரத்தின் அழைப்பு

வந்த அனைவரையும் ப.சி மற்றும் அவரது மனைவி இருவரும் வரவேற்க, விருந்து உபசரிப்பை கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஆகியோர் கவனித்தனர். பிறகு விதவிதமான சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன‌

வந்த அத்தனை பேரும் தம்பதியை வாழ்த்தி விட்டு விருந்து உண்டுவிட்டுச் சென்றனர்.

நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் வந்து வாழ்த்தினால் அப்பா அம்மா இருவருக்கும் அந்த நினைவுகள் காலத்துக்கும் மறக்காது என்றே இந்த விருந்து ஏற்பாட்டை கார்த்தி சிதம்பரம் செய்ததாகக் கூறுகின்றனர்.

`கோவைக்கு நோ...' - கரூர் சென்டிமென்ட்டை டிக் அடித்த செந்தில் பாலாஜி!

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில சட்டமன்றத் தேர்தல்களாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறவில்லை. இதை சரி செய்வதற்காக முன்னாள் ... மேலும் பார்க்க

சிரித்துப் பேசிக்கொண்ட பிரியங்கா காந்தி - மோடி - தேநீர் விருந்தில் கலகல!

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட பெயர் மாற்றம், அணு சக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, டெல்லி காற்று மாசு, எஸ... மேலும் பார்க்க

'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' - சீறும் மா.சு; கொதிக்கும் செவிலியர்கள்!

தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் 'வாக... மேலும் பார்க்க