செய்திகள் :

சிரித்துப் பேசிக்கொண்ட பிரியங்கா காந்தி - மோடி - தேநீர் விருந்தில் கலகல!

post image

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட பெயர் மாற்றம், அணு சக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, டெல்லி காற்று மாசு, எஸ்.ஐ.ஆர் திருத்தம் போன்ற பல்வேறு விவாதங்கள் நாடாளுமன்றத்தில் அனல் பறந்தன. இதற்கிடையில், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முடிவிலும் வழக்கமான தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

பிரியங்கா காந்தி - மோடி
பிரியங்கா காந்தி - மோடி

இந்த விருந்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, எம்.பி சுப்ரியா சுலே, தி.மு.க எம்.பி ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகுர், மத்திய அமைச்சர்களான ராம் மோகன் நாயுடு (டிடிபி) மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் (ஜேடியு) மற்றும் சிராக் பஸ்வான் (எல்ஜேபி-ஆர்விபி) உள்ளிட்ட எம்.பி-கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியும் பிரியங்கா காந்தியும் நட்புடன் உரையாடியனர். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்கா காந்தி, தனது தொகுதி மக்களுடன் உரையாடுவதற்கு வசதியாக மலையாளம் கற்று வருவதாக பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறார். மேலும், பிரியங்கா காந்தி பிரதமரிடம் அவரது சமீபத்திய ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மூன்று நாள் பயணம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது.

பிரியாங்கா காந்தி - மோடி
பிரியங்கா காந்தி - மோடி

அதற்கு பிரதமர் மோடி, ``இந்தியாவில் உள்ள மக்கள் நினைப்பதை விட எத்தியோப்பியா மிகவும் வித்தியாசமானது. அது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது." என்றார். இதற்கிடையில் தலைவர்களுக்கு மத்தியிலான உரையாடலில் சிரிப்பலைகள் எழுந்ததாகவும் பி.டி.ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ், "நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மிகக் குறுகிய கால கூட்டத்தொடர்களில் ஒன்று" எனக் கூறியதற்கு கவுன்ட்டர் கொடுத்த பிரதமர் மோடி, ``பல நாள்கள் நான் கத்த வேண்டியதில்லை என்பதால் இந்த தேநீர் விருந்தும், இந்த குறுகிய காலக் கூட்டத் தொடரும் என் தொண்டைக்கு நல்லது" என்று வேடிக்கையாகப் பதிலளித்தார்.

'தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா?' - சீறும் மா.சு; கொதிக்கும் செவிலியர்கள்!

தமிழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடுமையாக நடந்துகொள்வதாகவும் 'வாக... மேலும் பார்க்க

``சினிமா வசனமெல்லாம் பேசுகிறார்; விஜய் தான் பாஜகவின் `சி' டீம்!" - அமைச்சர் ரகுபதி சாடல்!

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்கள... மேலும் பார்க்க

"அது முடியாத காரியம்; ஒப்பந்த முறையை கொண்டு வந்ததே அதிமுகதான்"- செவிலியர்கள் போராட்டம் பற்றி மா.சு

திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நேற்றுமுன்தினம் (டிச. 18) சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் திடீர் போராட்டத்த... மேலும் பார்க்க

ஏமாற்றமா? எதார்த்தமா? - தமிழக அரசியலில் ரஜினி எனும் கேள்விக்குறி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

SIR: செல்லூர் ராஜூ தொகுதியில் அதிகம்! - மதுரை மாவட்டத்தில் 3,80,474 பேர் நீக்கம்!

மதுரை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன்குமார் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்பாக வெளியிட்டா... மேலும் பார்க்க

'பொங்கலுக்கு பிறகு தவெக-வுக்கு திருப்புமுனை' - செங்கோட்டையன் சர்ப்ரைஸ்

தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களுடன் களத்தில் பரபரக்க தொடங்கிவிட்டார்கள். அரசியலில் புதுவரவான தவெக கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம... மேலும் பார்க்க