செய்திகள் :

ஒரு மாம்பழம் ரூ. 3000; 9 மரங்களுக்கு 9 பாதுகாவலர்கள்; உலகின் மிகப்பெரிய மாம்பழத்தின் சிறப்பு என்ன?

post image

தற்போது நாடு முழுவதும் மாம்பழ சீசன் ஆகும். எங்கும் மாம்பழங்களாக இருக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஜுனா கட்டிவாடா என்ற கிராமத்தில் அபூர்வ வகை மாமரங்கள் வளர்கின்றன.

நூர்ஜஹான் என்ற அந்த மாம்பழ மரங்களை கிஷன் பரத்ராஜ்சிங் என்பவர் தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். ஆப்கானை பூர்வீகமாகக் கொண்ட நூர்ஜஹகான் மாமரக்கன்றுகளை கிஷன் தந்தை குஜராத்தில் இருந்து எடுத்து வந்து வளர்த்து வருகிறார். ஒவ்வொரு பழமும் 2 முதல் 5 கிலோ எடைகொண்டதாக இருக்கும். ஒரு பழத்தை வெட்டினாலே ஒரு குடும்பம் சாப்பிட முடியும்.

இந்த மாம்பழத்திற்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் நூர் ஜஹான் மாம்பழங்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), சவுதி அரேபியா, கத்தார் மற்றும் குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் இந்திய பிரீமியம் மாம்பழங்களுக்கு அதிக தேவை உள்ளது.

இது தவிர, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களும் இந்த மாம்பழங்களை விரும்புகின்றனர்.

சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இவற்றுக்குச் சிறப்பான தேவை உள்ளது.

இந்த மாம்பழங்களின் உற்பத்தி குறைந்து வருவதால், அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. தற்போது கிஷன் தோட்டத்தில் 9 மரங்கள் இருக்கின்றன. 9 மரங்களிலும் காய்கள் வந்துவிட்டன. இது தவிர 11 மரக்கன்றுகளை ஒட்டுக்கட்டுதல் முறையில் உருவாக்கி வேறு இடங்களில் நடவு செய்துள்ளார்.

கிஷனைப் பார்த்து அப்பகுதியில் உள்ள சிலர் இதே மாங்கன்றுகளை நடவு செய்து பார்த்தனர். ஆனால் எதுவும் சரியாக வரவில்லை. எனவேதான் கிஷன் தோட்டத்தில் விளையும் மாம்பழத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது.

இதையடுத்து யாராவது பிடுங்கிச்சென்றுவிடுவார்கள் என்ற பயத்தில் 9 மரத்திற்கு 11காவலர்கள் எந்நேரமும் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும், ஒரு மரத்திற்கு ஒருவர் வீதம் 9 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளே வேறு மனிதர்கள் அல்லது பறவைகளைக்கூட உள்ளே வரவிடாமல் தடுத்து வருகின்றனர். கிஷன் தனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை விற்பனை செய்ய பொதுமக்களிடம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்கிறார்.

உலகின் மிகப்பெரிய மாம்பழமாகக் கருதப்படும் நூர்ஜஹான் அதன் கவர்ச்சியான நிறம், தனித்துவமான நறுமணம் மற்றும் இனிப்பு சுவை ஆகியவை இதைப் பிரபலமான மாம்பழமாக்குகின்றன. அதனால்தான் முதல் பார்வையில் மக்களை ஈர்க்கிறது.

இந்த நூர்ஜஹான் வகை மாம்பழம் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்தது. குஜராத் வழியாக மால்வா மற்றும் ஜபுவா-அலிராஜ்பூர் பகுதியை அடைந்தது. முகலாயர் காலத்தில், அரச குடும்பங்களின் தோட்டங்களில் பெரிய அளவு மற்றும் தனித்துவமான சுவை கொண்ட மாம்பழங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது.

செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் வழங்க ஈரான் சம்மதம்: இரு நாடுகளிடையே விரைவில் ஒப்பந்தம்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வந்த தாக்குதலுக்கு கடந்த மாதம் தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவும், ஈரானும் நிரந்தர போர்ந... மேலும் பார்க்க

வான்வெளியை மூடிய ஈரான்; மகன் திருமணத்துக்கு செல்லாத ட்ரம்ப்! - மீண்டும் தாக்குதல் தொடங்க திட்டமா?

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தது. அமெரிக்கா விதிக்கும் நி... மேலும் பார்க்க

ஒரே பள்ளி, ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண்!பத்தாம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகளின் ஆச்சர்ய சாதனை!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் - வனிதா தம்பதியினரின் இரட்டை மகள்கள் கார்த்திகா மற்றும் கீர்த்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற... மேலும் பார்க்க

ரயிலில் திருட்டு போன பேக்; மும்பை தெருக்களில் யாசகம் எடுத்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவர்

மும்பையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் இருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் புறநகர் ரயில்கள், சாலை சிக்னல்கள், மசூதிகள், கோயில்களில் யாசகம் பெறுகின்றனர். இதுபோன்று யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக மும்பை போ... மேலும் பார்க்க

ஓய்வுபெற ஒரு மாதம் இருந்த நிலையில் நீட் வினாத்தாளை கசியவிட்ட பள்ளி தலைமை ஆசிரியை - கைது செய்த சிபிஐ

நாடு முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பு கசிந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிராவில் லாத்தூரை சேர்ந்த ஆசிரியர் சிவ்ராஜ், பேராச... மேலும் பார்க்க