செய்திகள் :

'ஒரு லிட்டர் பெட்ரோல் 265 ரூபாய்' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்! - எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?

post image

''அவனுக்கென்னப்பா, கோடீஸ்வரன். எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா இருக்கான்'' என்று சில நண்பர்களைப் பற்றி சிலர் கொஞ்சம் பொறாமையுடன் பேசுவதைக் கேட்டு இருப்பீர்கள்.

கோடீஸ்வரன் என்பது இன்றைக்கு ஒரு கெத்து ஃபீலிங்தான். ஆனால், இந்த கெத்து 20 வருஷம் கழிச்சும் அப்படியே இருக்குமா என்று கேட்டால், காத்து எறங்குன ட்யூப் மாதிரி இன்றைய 1 கோடி ரூபாய் மதிப்பு 5% பணவீக்கத்தில் வெறும் 37 லட்சம் ரூபாயாத்தான் இருக்கும்! இதைக் கேள்விப்பட்றப்ப ''அய்யய்யோ...'' என்கிற மாதிரி இருக்கில்லையா?

பணத்தோட மதிப்பு ஏன் இப்படி அநியாயத்துக்கு இறங்குது, பணத்தோட மதிப்பு குறையாம இருக்கணும்னா என்ன செய்யணும்னு கேக்குறீங்களா? மேற்கொண்டு படிங்க.

பணக்காரர்

மொத்தல்ல, பணத்தோட மதிப்பு ஏன் இறங்குதுன்னு பார்க்கணும். பணத்தோட மதிப்பு ஏன் இறங்குது? நாம அன்றாடம் வாழ்க்கையில பொருள்களோட விலை அதிகமாகிறதால நம்மகிட்ட இருக்கிற பணத்தோட மதிப்பு இறங்குது.

உதாரணமா, 25 வருஷம் முன்னாடி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வெறும் 30 ரூபா. ஆனா, இன்றைக்கு அதே பெட்ரோ விலை 100 ரூபாய்க்கு மேல. 25 வருஷத்துக்கு முன்னால 100 ரூபாய்க்கு 3 லிட்டர் பெட்ரோல் வாங்கி இருப்போம். ஆனா, இன்னைக்கு ஒரே ஒரு லிட்டர் பெட்ரோல் கூட வாங்க முடியல்ல.

சரி, இந்த பெட்ரோல் விலை இப்ப இருக்கிற மாதிரியே 100 ரூபாயிலதான் இருக்குமா? நிச்சயம் இருக்காது. வருஷத்துக்கு 5% என்கிற கணக்குல பெட்ரோல் விலை ஏறுதுன்னா அடுத்த 10 வருஷத்துக்குப்பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 163 ரூபாயா இருக்கும். 20 வருஷம் கழிச்சுப் பார்த்தா, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 265 ரூபா இருக்கும்!

''ஆத்தாடி! பெட்ரோல் விலை இவ்வளவு ஏறிடுச்சே! இனிமே சைக்கிள்தான் நமக்கு சரி'' என்று நினைத்து நம்மில் யாராவது சைக்கிளைப் பயன்படுத்த தயாராக இருப்பார்களா? ஓரிருவர் தயாராக இருப்பார்கள். எல்லோருமே சைக்கிளை மிதிக்கத் தயாராக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது! அப்படியானால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 265 ரூபாய் தந்து வாங்க நாம் தயாராக இருக்க வேண்டும். அந்தளவுக்கு நம்மிடம் பணம் இருக்க வேண்டும்!

இப்படி பெட்ரோல், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், குழந்தைகளின் பள்ளி, கல்லூரிக் கட்டணம் என எல்லாவற்றின் விலை கண்ணாபின்னாவென்று ஏறினால், இப்போது இருக்கும் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு எப்படிக் குறையாமல் இருக்கும்? 20 வருஷம் கழிச்சு அது வெறும் 37 லட்சம் ரூபாயத்தானே இருக்கும்!

பொருள்களோட விலை உயர்றதை நம்மால தடுக்க முடியாது. அதனால பணத்தோட மதிப்பு குறையுறதும் நம்மால தடுக்க முடியாது. ஆனா, நாம கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துகிட்டா, பணத்தட்டுப்பாடு என்கிற பிரச்னையே இல்லாம இருக்கலாம். எப்படி?

20 வருஷம் கழிச்சு நம்மகிட்ட ரூ.2.65 கோடி இருந்துதுன்னா, நாம பணம் தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லாம ஜாலியா இருக்கலாம். இந்த 2.65 கோடி ரூபாயை நீங்க எப்படி சேர்க்கப் போறீங்க? அதுக்கு என்ன திட்டம் வச்சிருக்கீங்க என்கிறதுதான் முக்கியமான கேள்வி!

சிந்திச்சுப் பாருங்க மக்களே! இதுக்கு உங்ககிட்ட என்ன திட்டம் இருக்குன்னு கமென்ட்ல போடுங்க மக்களே!

NRI Corner 4 - SIP பத்தி தெரிஞ்சுக்கிட்டா மட்டும் போதாது; SWP பத்தி தெரிஞ்சுக்கிட்டு சூப்பரா இருங்க!

பணம் சேமிக்கணும்… அதே நேரத்தில் வாழ்க்கையை என்ஜாய் பண்ணணும்… இந்த இரண்டு விஷயத்தையும் சூப்பரா பேலன்ஸ் பண்ண உதவுகிற கருவிகள்தான் SIP மற்றும் SWP! இதில் SIP பற்றி ஓரளவுக்கு தெரிந்துவிட்டது. ஆனால், SWP..... மேலும் பார்க்க

கிரெடிட் கார்டும் 'மகிழ்ச்சி'தான்; என்ன கார்டு தேர்வு செய்யணும்? #CreditCard A-Z | பணம் வளர்ப்போம்

நாள் 4இதுவரை கிரெடிட் கார்டு என்றால் 'கடன்... கடன்... கொஞ்சம் கவனம் வேண்டும்... பார்த்து செலவு செய்ய வேண்டும்' என்று பார்த்தோம். இன்று கிரெடிட் கார்டின் பாசிட்டிவ் பக்கங்களைப் பார்க்கலாம். அவற்றை பற்ற... மேலும் பார்க்க

`10 வருஷம்தான் லேட்... ஆனா, 35 லட்சம் ரூபாய் அவுட்!' - முதலீட்டில் தாமதத்தின் விளைவு!

காலத்தின் மதிப்பை உணராமல் ஒவ்வொரு தினத்தையும் வீணாக்கிக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம். 'நான் அப்படி இல்லை சார். ஒரு நிமிடம்கூட வீணடிக்காமல் ஏதாவது ஒன்றை செய்துகொண்டு இருப்பேன்' என்பவர்கள் ஏராளம். எல்லா வ... மேலும் பார்க்க

NRI Corner 3 - வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான சிறப்பு ஏற்பாடு; உங்கள் பெயரை உடனே பதிந்து கொள்ளுங்கள்

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னை, கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும். பிற்காலத்துக்குப் பேருதவியாகஇருக்கும் என்கிற கேள்விக்குப் பதில் த... மேலும் பார்க்க

பங்குச் சந்தை இறக்கம் முடிவுக்கு வருகிறதா? - மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்?

இந்தியப் பங்குச் சந்தையானது கடந்த ஒரு மாத காலமாகவே இறக்கத்தின் போக்கில் இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் Vs ஈரான் போர் தொடங்கிய பின் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக உலக அளவில் பங்குச் சந்தைகள் இறக்கத்தின் ... மேலும் பார்க்க

NRI Corner 2: Real Estate, Gold, Mutual Fund - NRI தமிழர்கள் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம்?

இன்றைய தேதியில் தமிழகத்தில் பிறந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று வேலை செய்து வருமானம் சம்பாதிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பல ... மேலும் பார்க்க