செய்திகள் :

ஒரே பள்ளி, ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண்!பத்தாம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகளின் ஆச்சர்ய சாதனை!

post image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் - வனிதா தம்பதியினரின் இரட்டை மகள்கள் கார்த்திகா மற்றும் கீர்த்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளனர்.

பிறந்தது முதல் பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்த இவர்கள், கல்வியிலும் ஒன்றாக பயணம் செய்து வந்துள்ளனர். இருவரும் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு உதவி பெறும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தனர்.

தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. வழக்கம்போல் ஆசியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வு முடிவுகளை கண்டு மகிழ்ந்தனர்.

ஒற்றை பிள்ளை என்றாலே தேர்வு முடிவு அறிய எதிர்ப்பார்ப்பு பதட்டமும் அதிகம்தான். அதிலும் இரட்டையர்கள் என்றால் சொல்லாவா வேண்டும். மிகுந்த படபடப்பும் அதீத எதிர்ப்பார்ப்பும் ஓவரூரில் இவர்களின் குடும்பத்திலும் நிலவியது.

குடும்பத்தினருடன் தேர்வு முடிவுகளை பார்த்த இரட்டை சகோதரிகளான கார்த்திகா மற்றும் கீர்த்திகாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவே இருந்தது தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றது.

இருவரும் தேர்வில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில்தான் இருந்தது இவர்கள் இருவருமே 414 என்று ஒரே மதிப்பெண்கள் பெற்றது.

பிறப்பால் இரண்டையாய் இணைந்து, ஒரே பள்ளியில் பயினறு, ஒரே தேர்வினை எதிர்க்கொண்டு, இருவரும் ஒரே மதிப்பெண் பெற்ற சம்பவமானது அப்பகுதி மக்களிடேயே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சாதனை ஓவரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவிய நிலையில், பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் இரட்டை சகோதரிகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பள்ளியின் ஆசிரியர்கள் மாணவிகளின் முயற்சியினை பாராட்டியதுடன், தொடர்ந்து உயர்கல்வியிலும் மேலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் வாழ்த்தினர்.

ரயிலில் திருட்டு போன பேக்; மும்பை தெருக்களில் யாசகம் எடுத்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவர்

மும்பையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் இருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் புறநகர் ரயில்கள், சாலை சிக்னல்கள், மசூதிகள், கோயில்களில் யாசகம் பெறுகின்றனர். இதுபோன்று யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக மும்பை போ... மேலும் பார்க்க

ஓய்வுபெற ஒரு மாதம் இருந்த நிலையில் நீட் வினாத்தாளை கசியவிட்ட பள்ளி தலைமை ஆசிரியை - கைது செய்த சிபிஐ

நாடு முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பு கசிந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிராவில் லாத்தூரை சேர்ந்த ஆசிரியர் சிவ்ராஜ், பேராச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "இவர்களுக்கு யாரும் இல்லை" - குழந்தைகளை பஸ்ஸில் அமரவைத்துவிட்டு காதலனுடன் போன தாய்

மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் இருந்து சாம்பாஜி நகர் செல்லும் பஸ்சில் இரண்டு சிறார்கள் தனியாக அழுது கொண்டு அமர்ந்து இருப்பதை பஸ் நடத்துனர் கவனித்தார். பஸ் பீட் என்ற இடத்திற்கு வந்தபோதுதான் அக்குழந்த... மேலும் பார்க்க

டீசல் பற்றாக்குறை; உழவுக்கு டிராக்டருக்கு பதில் பாரம்பர்ய மாடுகளுக்குத் திரும்பும் மகா., விவசாயிகள்

மகாராஷ்டிராவில் சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை விவசாயத்திற்கு டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய டிராக்டராவது இருக்கும். ஆனால் சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோ... மேலும் பார்க்க

இத்தாலியில் மெலோனிக்கு மோடி பரிசளித்த Melody சாக்லேட்... ஏன் இந்தியா முழுக்க ‘Out of Stock’?

இத்தாலி பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவில் பிரபலமான பார்லே (Parle) நிறுவனத்தின் 'மெலோடி' (Melody) சாக்லேட்டைப் பரிசளித்தார். இந்த வீடியோவை மெலோனி ... மேலும் பார்க்க

`மனைவி வீட்டு வேலைக்காரி கிடையாது; சமைக்காமல் இருப்பது கொடூரம் ஆகாது' - மும்பை உயர் நீதிமன்றம்

மும்பையை சேர்ந்த கணக்கு தனிக்கையாளர் தனது மனைவி வீட்டு வேலைகளை செய்ய மறுப்பதாக கூறி குடும்ப நீதிமன்றத்தில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தார். அதோடு அப்பெண்ணிற்கு பராமரிப்பு செலவுக்கான தொ... மேலும் பார்க்க