செய்திகள் :

ஒரே பள்ளி, ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண்!பத்தாம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகளின் ஆச்சர்ய சாதனை!

post image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் - வனிதா தம்பதியினரின் இரட்டை மகள்கள் கார்த்திகா மற்றும் கீர்த்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளனர்.

பிறந்தது முதல் பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்த இவர்கள், கல்வியிலும் ஒன்றாக பயணம் செய்து வந்துள்ளனர். இருவரும் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு உதவி பெறும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தனர்.

தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. வழக்கம்போல் ஆசியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வு முடிவுகளை கண்டு மகிழ்ந்தனர்.

ஒற்றை பிள்ளை என்றாலே தேர்வு முடிவு அறிய எதிர்ப்பார்ப்பு பதட்டமும் அதிகம்தான். அதிலும் இரட்டையர்கள் என்றால் சொல்லாவா வேண்டும். மிகுந்த படபடப்பும் அதீத எதிர்ப்பார்ப்பும் ஓவரூரில் இவர்களின் குடும்பத்திலும் நிலவியது.

குடும்பத்தினருடன் தேர்வு முடிவுகளை பார்த்த இரட்டை சகோதரிகளான கார்த்திகா மற்றும் கீர்த்திகாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவே இருந்தது தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றது.

இருவரும் தேர்வில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில்தான் இருந்தது இவர்கள் இருவருமே 414 என்று ஒரே மதிப்பெண்கள் பெற்றது.

பிறப்பால் இரண்டையாய் இணைந்து, ஒரே பள்ளியில் பயினறு, ஒரே தேர்வினை எதிர்க்கொண்டு, இருவரும் ஒரே மதிப்பெண் பெற்ற சம்பவமானது அப்பகுதி மக்களிடேயே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சாதனை ஓவரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவிய நிலையில், பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் இரட்டை சகோதரிகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பள்ளியின் ஆசிரியர்கள் மாணவிகளின் முயற்சியினை பாராட்டியதுடன், தொடர்ந்து உயர்கல்வியிலும் மேலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் வாழ்த்தினர்.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க