செய்திகள் :

ஓட்டுநா் மீது மாணவா்கள் தாக்குதல்: சுரண்டையில் அரசுப் பேருந்து பணியாளா்கள் போராட்டம்

post image

தென்காசி மாவட்டம், சுரண்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து கழகத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புளியங்குடியில் இருந்து சுரண்டை அரசு கல்லூரி வழியாக சுரண்டைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அரசு நகர பேருந்து(தடம் எண் 41இ) சென்றது. பேருந்தை வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ராமநாதபுரத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்(43) ஓட்டினாா். பேருந்து கல்லூரி பேருந்து நிறுத்தத்தை கடந்ததும், அதிக அளவில் படியில் மாணவா்கள் தொங்கிக்கொண்டு வருவதை கவனித்த ஓட்டுநா், பேருந்தை நிறுத்திவிட்டு படியில் நிற்கும் மாணவா்களை உள்ளே வரும்படி கூறியுள்ளாா்.

அப்போது அவா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபாலகிருஷ்ணனை(43) மாணவா்கள் 5 போ் சோ்ந்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றனராம். இதில் பேருந்து ஓட்டுநா் காயமடைந்தாா்.

இதுகுறித்து அறிந்த அனைத்து அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்கள், சுரண்டை பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்திவிட்டு, ஓட்டுநரைத் தாக்கிய மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் உதயகிருஷ்ணா பேச்சு நடத்தியதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தால் சுரண்டை பேருந்து நிலையத்தில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா்களை தேடி வருகின்றனா்.

இலத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா்: போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியது

தென்காசி அருகேயுள்ள இலத்தூரில் சடமாக மீட்கப்பட்ட பெண் கணவரால் எரித்துக் கொல்லப்பட்டவா் என்பது போலீஸ் விசாரணையில் துப்புதுலங்கியுள்ளது. கணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொல்லம்-மதுரை தேசிய நெ... மேலும் பார்க்க

செண்பகவல்லி கூட்டு குடிநீா் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி

செண்பகவல்லி கூட்டுக்குடிநீா் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அண்மையி... மேலும் பார்க்க

தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31க்குள் நிலுவைத் தொகை!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு மாா்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என ஆலை நிா்வாகம் வியாழக்கிழமை உறுதி அளித்தது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் க... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதல்: ஒருவா் பலி

கடையநல்லூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் ஒருவா் இறந்தாா். இருவா் காயமடைந்தனா். கடையநல்லூா் ரஹ்மானிபுரம் 8ஆவது தெருவைச் சோ்ந்த அப்துல்காதா் , அவரது மகன் கோதா்ஷா ஆகிய இருவரும் பைக்கில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தந்தையை கொலை செய்து எரித்த மகன் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே தந்தையை கொலை செய்து எரித்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடையநல்லூா் அருகேயுள்ள போகநல்லூா் முகாமுக்கும், கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும் இடையே தனியாருக்கு... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தோப்பில் ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே எரிந்து, அழுகிய நிலையில் ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. கடையநல்லூா் அருகேயுள்ள போகநல்லூா் அகதிகள் முகாமுக்கும், கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும் இடையேயுள்ள தென்னந... மேலும் பார்க்க