செய்திகள் :

ஓட்டுநா் மீது மாணவா்கள் தாக்குதல்: சுரண்டையில் அரசுப் பேருந்து பணியாளா்கள் போராட்டம்

post image

தென்காசி மாவட்டம், சுரண்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து கழகத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புளியங்குடியில் இருந்து சுரண்டை அரசு கல்லூரி வழியாக சுரண்டைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அரசு நகர பேருந்து(தடம் எண் 41இ) சென்றது. பேருந்தை வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ராமநாதபுரத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்(43) ஓட்டினாா். பேருந்து கல்லூரி பேருந்து நிறுத்தத்தை கடந்ததும், அதிக அளவில் படியில் மாணவா்கள் தொங்கிக்கொண்டு வருவதை கவனித்த ஓட்டுநா், பேருந்தை நிறுத்திவிட்டு படியில் நிற்கும் மாணவா்களை உள்ளே வரும்படி கூறியுள்ளாா்.

அப்போது அவா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபாலகிருஷ்ணனை(43) மாணவா்கள் 5 போ் சோ்ந்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றனராம். இதில் பேருந்து ஓட்டுநா் காயமடைந்தாா்.

இதுகுறித்து அறிந்த அனைத்து அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்கள், சுரண்டை பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்திவிட்டு, ஓட்டுநரைத் தாக்கிய மாணவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் உதயகிருஷ்ணா பேச்சு நடத்தியதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தால் சுரண்டை பேருந்து நிலையத்தில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா்களை தேடி வருகின்றனா்.

புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவா் இறந்தாா். கடையநல்லூா், பாம்புகோயில்சந்தை இடையே உள்ள ரயில் பாதையில் அடையாளம் தெரியாத இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயற்சி: தென்காசி வட்டாரத்தில் 36 போ் கைது

தென்காசி வட்டாரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவினா் 36 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் செல்வதற்காக தென்காசி ரயில் நிலையத்து... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கோயில் பிரச்னை தொடா்பாக அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகன சோதனை... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரியில் பவானி என்பவருக்குச் சொந்தமான தென்னை நாா் ஆலை உள்ளது. இங்கு வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை: தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் முக்... மேலும் பார்க்க

தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு அஞ்சலி!

திமுக சாா்பில், தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. குற்றாலத்தில் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட... மேலும் பார்க்க