செய்திகள் :

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

post image

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது.

ஆனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர்.

இபிஎஸ், ஓபிஎஸ்

இதையடுத்து ஆட்டம் சூடு பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர்.

இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், "இன்னும் ஒரு மாதத்தின் உள்ளாக அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும். ஓ. பன்னீர் செல்வத்தின் தலைமையில் அந்த புதிய கட்சி உருவாக்கப்படும்" என்று பேசி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.

வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்

இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன.

எதுவாகினாலும், இந்த நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 15ம் தேதிக்குள் இந்த அதிமுக பிரச்னைக்கு ஒரு முடிவுக்கு வரும்; இல்லையெனில் இரு கட்சியாக உடையும் என்று கூறுகிறார்கள்.

``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது.ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிச்சாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் ... மேலும் பார்க்க

``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்

கடந்த நவ. 2ம் தேதி இரவு 11 மணியளவில், 20 வயது மாணவி கோவை விமான நிலையம் பின்புற பகுதியில் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த... மேலும் பார்க்க

காரைக்குடி: போராட்டத்தால் பூட்டப்பட்ட மதுக்கடை - மீண்டும் திறக்கப்படலாமென மக்கள் அச்சம்!

கடந்த 14 ஆம் தேதி காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் 'டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் துயரம் அடைகிறார்கள்' என்று பள்ளி மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்த, துணை... மேலும் பார்க்க

"பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி" - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் இந்த மக்கள் சந்திப்பு என்பதால் பலத்த பாதுகாப்புடன் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `நீங்கள் ஓட்டை குறைத்தால், நான் நிதியை குறைத்துவிடுவேன்'- அஜித் பவார் எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு வரும் 2ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மாலேகாவ் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில த... மேலும் பார்க்க

புதிய தொழிலாளர் சட்டம்: ``ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு" - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம் CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.4 முக்கிய தொழிலாளர் ச... மேலும் பார்க்க