செய்திகள் :

ஓய்வுபெற ஒரு மாதம் இருந்த நிலையில் நீட் வினாத்தாளை கசியவிட்ட பள்ளி தலைமை ஆசிரியை - கைது செய்த சிபிஐ

post image

நாடு முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பு கசிந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிராவில் லாத்தூரை சேர்ந்த ஆசிரியர் சிவ்ராஜ், பேராசிரியர் குல்கர்னி உட்பட நாடு முழுவதும் இது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதிதாக லாத்தூரை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை மனீஷா சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீட் வினாத்தாளை இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மனீஷா மந்தாரே என்பவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நீட் தேர்வை நடத்தும் தேசிய டெஸ்டிங் ஏஜென்சி மனீஷா சஞ்சயை நீட் இயற்பியல் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் சேர்த்து இருந்தது.

இயற்பியல் வினாத்தாளை பார்க்கும் அளவுக்கு மனீஷாவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.

மனீஷா தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இயற்பியல் வினாத்தாளை மனீஷா மந்தாரேயுடன் பகிர்ந்து கொண்டது சி.பி.ஐ நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனீஷா சஞ்சய் பகிர்ந்த வினாக்கள் நீட் தேர்வில் வந்திருந்தது. மனீஷாவின் கைதை தொடர்ந்து இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மனீஷா சஞ்சய் அடுத்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். ஆனால் இப்போது வினாத்தாளை கசியவிட்டு கைது செய்யப்பட்டு இருப்பதால் அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மனீஷா சஞ்சய் பணிபுரியும் பள்ளி செயலாளர் சதீஷ் கவாலி கூறுகையில், மனீஷா 1992 ஆம் ஆண்டு முதல் இந்த பள்ளியில் பணியாற்றுவதாகவும், இதற்கு முன்பு ஜூனியர் கல்லூரி அளவில் இயற்பியல் கற்பித்தார் என்றும், 2024 ஆம் ஆண்டு பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றார் என்றும், மனீஷாவின் செயல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, நீட் தேர்வுக்கான வினாத்தாளை அமைத்த குழுவின் ஒரு பகுதியாக இடம் பெற்று இருந்த வேதியியல் விரிவுரையாளர் குல்கர்னி, மனீஷா மாந்தரே, அழகு நிலைய உரிமையாளர் மனீஷா வாக்மரே மற்றும் நாசிக்கில் கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வந்த தனஞ்சய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர லாத்தூரை சேர்ந்த டாக்டர் ஒருவரிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க