செய்திகள் :

ஓய்வுபெற ஒரு மாதம் இருந்த நிலையில் நீட் வினாத்தாளை கசியவிட்ட பள்ளி தலைமை ஆசிரியை - கைது செய்த சிபிஐ

post image

நாடு முழுவதும் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பு கசிந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிராவில் லாத்தூரை சேர்ந்த ஆசிரியர் சிவ்ராஜ், பேராசிரியர் குல்கர்னி உட்பட நாடு முழுவதும் இது வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதிதாக லாத்தூரை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை மனீஷா சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நீட் வினாத்தாளை இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மனீஷா மந்தாரே என்பவருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நீட் தேர்வை நடத்தும் தேசிய டெஸ்டிங் ஏஜென்சி மனீஷா சஞ்சயை நீட் இயற்பியல் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் சேர்த்து இருந்தது.

இயற்பியல் வினாத்தாளை பார்க்கும் அளவுக்கு மனீஷாவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.

மனீஷா தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இயற்பியல் வினாத்தாளை மனீஷா மந்தாரேயுடன் பகிர்ந்து கொண்டது சி.பி.ஐ நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனீஷா சஞ்சய் பகிர்ந்த வினாக்கள் நீட் தேர்வில் வந்திருந்தது. மனீஷாவின் கைதை தொடர்ந்து இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மனீஷா சஞ்சய் அடுத்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். ஆனால் இப்போது வினாத்தாளை கசியவிட்டு கைது செய்யப்பட்டு இருப்பதால் அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மனீஷா சஞ்சய் பணிபுரியும் பள்ளி செயலாளர் சதீஷ் கவாலி கூறுகையில், மனீஷா 1992 ஆம் ஆண்டு முதல் இந்த பள்ளியில் பணியாற்றுவதாகவும், இதற்கு முன்பு ஜூனியர் கல்லூரி அளவில் இயற்பியல் கற்பித்தார் என்றும், 2024 ஆம் ஆண்டு பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றார் என்றும், மனீஷாவின் செயல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, நீட் தேர்வுக்கான வினாத்தாளை அமைத்த குழுவின் ஒரு பகுதியாக இடம் பெற்று இருந்த வேதியியல் விரிவுரையாளர் குல்கர்னி, மனீஷா மாந்தரே, அழகு நிலைய உரிமையாளர் மனீஷா வாக்மரே மற்றும் நாசிக்கில் கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வந்த தனஞ்சய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர லாத்தூரை சேர்ந்த டாக்டர் ஒருவரிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

ஒரே பள்ளி, ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண்!பத்தாம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகளின் ஆச்சர்ய சாதனை!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் - வனிதா தம்பதியினரின் இரட்டை மகள்கள் கார்த்திகா மற்றும் கீர்த்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற... மேலும் பார்க்க

ரயிலில் திருட்டு போன பேக்; மும்பை தெருக்களில் யாசகம் எடுத்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரி மாணவர்

மும்பையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் இருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் புறநகர் ரயில்கள், சாலை சிக்னல்கள், மசூதிகள், கோயில்களில் யாசகம் பெறுகின்றனர். இதுபோன்று யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக மும்பை போ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "இவர்களுக்கு யாரும் இல்லை" - குழந்தைகளை பஸ்ஸில் அமரவைத்துவிட்டு காதலனுடன் போன தாய்

மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் இருந்து சாம்பாஜி நகர் செல்லும் பஸ்சில் இரண்டு சிறார்கள் தனியாக அழுது கொண்டு அமர்ந்து இருப்பதை பஸ் நடத்துனர் கவனித்தார். பஸ் பீட் என்ற இடத்திற்கு வந்தபோதுதான் அக்குழந்த... மேலும் பார்க்க

டீசல் பற்றாக்குறை; உழவுக்கு டிராக்டருக்கு பதில் பாரம்பர்ய மாடுகளுக்குத் திரும்பும் மகா., விவசாயிகள்

மகாராஷ்டிராவில் சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை விவசாயத்திற்கு டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய டிராக்டராவது இருக்கும். ஆனால் சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோ... மேலும் பார்க்க

இத்தாலியில் மெலோனிக்கு மோடி பரிசளித்த Melody சாக்லேட்... ஏன் இந்தியா முழுக்க ‘Out of Stock’?

இத்தாலி பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவில் பிரபலமான பார்லே (Parle) நிறுவனத்தின் 'மெலோடி' (Melody) சாக்லேட்டைப் பரிசளித்தார். இந்த வீடியோவை மெலோனி ... மேலும் பார்க்க

`மனைவி வீட்டு வேலைக்காரி கிடையாது; சமைக்காமல் இருப்பது கொடூரம் ஆகாது' - மும்பை உயர் நீதிமன்றம்

மும்பையை சேர்ந்த கணக்கு தனிக்கையாளர் தனது மனைவி வீட்டு வேலைகளை செய்ய மறுப்பதாக கூறி குடும்ப நீதிமன்றத்தில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தார். அதோடு அப்பெண்ணிற்கு பராமரிப்பு செலவுக்கான தொ... மேலும் பார்க்க